|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

28 January, 2014

அவரவர் 'வலி' அவருக்கு...

எல்லோருக்கும் கார் ஒட்ட ஆசை வந்தது தப்பில்லை ஆனால் அதற்கான ரோடு கட்டமைப்பு நம்மிடம் இருக்கிறதா என்பதே கேள்வி.யார் மீதாவது மோதாமல் யாருடைய வாகனத்தின் மீதாவது மோதாமல் அல்லது மோதல் வாங்காமல் வீடு திரும்பினால் இப்போதெல்லாம் அது அதிசயத்தில் சேத்திதான்.போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்த காவல்துறை போலீஸ்காரரின் கால் மீது டிரைவர் ஒருவர் காரை ஏற்றிவிட்டார்.வலியால் துடித்த போலீஸ்காரர், காலை கார் டயரில் இருந்து விடுவித்துக்கொண்ட அடுத்த நிமிடம் காரைத்திறந்து டிரைவருக்கு கொடுத்தார் பாருங்கள் ஒரு மிதி, இனி ஜென்மத்திற்கும் யார் கால் மீதும் காரை விடமாட்டார்.போலீஸ்காரர் என்பதால் மிதித்துவிட்டார், இதுவே 'பப்ளிக்' என்றால் அவரை கூட்டிப்போய் ஸ்டேஷனில் வைத்து மிதி மிதி என்று மிதிப்பார்கள்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...