|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

19 October, 2014

உனக்கு எல்லாம் தெரியும்!

1. உனக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்காதே !!
மற்றும் உனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்றும் நினைக்காதே !!
2.ஆபத்தில் பொய் சொல்ல தயங்காதே !!
பொய் சொல்லி ஒருவரிடமும் பழகாதே !!
3. கடவுளை நம்பு , கடவுளை மட்டுமே நம்பாதே !!
4. உன் மனசாட்சி மட்டும் தான் இந்த உலகில்
உண்மையான நீதிபதி என்பதை மறவாதே !!
5. நீ செல்லும் பாதை சரியாக இருந்தால் ,
உன் மனசாட்சியும் சரியென கூறினால்
அந்த கடவுளே இடையூறாக வந்தாலும் மதியாதே !!
6. முடியும் என்று நினைத்தால்
நிச்சயம் உன்னால் முடியும் !!
7. பணத்தை மட்டுமே தியாகம் செய் ,
உன் கொள்கையை தியாகம் செய்து விடாதே !!
8. நம்பிக்கையும் , மானத்தையும் இழந்து
உயிர் வாழ்வதே வீண் !!
9. தவறுகளை கண்டும் காணமல் செல்வது நீ ஆண் இனமாய் பிறந்ததற்கே அவமானம் !!
10. நிமிர்ந்து நில் - உன் கோவம் நியாயமாய் இருந்தால் !!
துணிந்து பேசு - உன் கருத்து உண்மையாக இருந்தால் !!

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...