|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

17 March, 2011

3வது அணிக்கு திடீர் முயற்சி? பரபரப்பாக அரங்கேறும் காட்சிகள்

அ.தி.மு.க, அணியில் நீண்ட கால நண்பராக இருந்து வரும் ம.தி.மு.க.,.வுக்கு தொகுதி ஒதுக்குவதில் அ.தி.மு.க., அக்கறை காட்டவில்லை. இது வரை கவுரவ பேச்சுக்கு கூட அ.தி.மு.க, அழைக்கவில்‌லை. இது பெற்ற குழந்தையை விஷம் வைத்து ‌கொல்வதற்கு சமம் என இக்கட்சியின் கொள்கை பரப்பு செயலர் நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார். புதிதாக சேர்ந்த தே.மு.தி.க., வுக்கு 41 தொகுதிகள் ஓதுக்கப்பட்டன.
தேசிய கட்சிகளான இடதுசாரிகள் அ.தி.மு.க., பேச்சுவார்த்தைக்கு எப்போது அழைக்கும் என காத்திருந்தன. நீண்ட இழுபறிக்கு பின்னர் மார்க்., கம்யூ., கட்சிக்கு 12 இடங்களும், இந்திய கம்யூ., கட்சிக்கு 10 இடங்களும் ஒதுக்கப்பட்டன. இது மிக குறைவுதான் என்று அதிருப்தியில் இருந்தாலும் அ.தி.மு.க., வெற்றிக்கு பாடுபடுவோம் என அறிவித்தன. 45 நாட்களாக பேச்சு வார்த்தைக்கு அ.தி.மு.க., அழைக்கும் என எதிர்பாத்து பொறுமையாக இருந்த நடிகர் கார்த்திக் தலைமையிலான நாடாளும் மக்கள் கட்சி இந்த கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.

தொகுதியை தன்னி‌ச்சையாக அறிவிப்பதா ? இதற்கிடையில் நேற்று அ.தி.மு.,க தனது 160 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தது. இது கூட்டணி கட்சிகள் இடையே இப்போது பெரும் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதில் தே.மு.தி.க., இடதுசாரிகள், பார்வர்டுபிளாக் கட்சிகள் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என கேட்ட தொகுதிகள் அடங்கும். கூட்டணி கட்சிகளுடன் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக அறிவித்தது அதிர்ச்சி தருவதாக மார்க்., கம்யூ., வெளிப்படையாக அறிவித்தது. சரத்குமார் தலைமையிலான சமத்துவமக்கள் கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளும் அதிருப்பதியில் இருக்கின்றன. இது தொடர்பாக அடுத்து என்ன செய்வது என இடதுசாரிகள் இன்று காலை அவசர கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளன. தே.மு.தி.க., வும், இன்று கட்சி உயர் நிர்வாகிகள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளன.இந்த கூட்டத்தில் அடுத்து என்ன செய்வது என ஆலோசிக்கப்பட்டது. ஆலோசனைக்கு பின்னர் நிருபர்களிடம் பேசிய தா. பாண்டியன் கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க,வுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.

விஜயகாந்துடன் தலைவர்கள் சந்திப்பு: இன்று காலையில் மார்க்., கம்யூ., இந்திய கம்யூ., கட்சியின் மாநிலக்குழு கூட்டம் நடந்தது. அ.தி.மு.க.,வின் ஆணவப்போக்கிற்கு பாடம் கற்பிக்க முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. அ.தி.மு.,க கூட்டணியில் இடம்பெற்றிருக்கும், இந்திய கம்யூ., மாநில செயலர் தா.பாண்டியன், மார்க்., கம்யூ., ‌ஜி.ராமகிருஷ்ணன், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணச்சாமி , மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் சேதுராமன், பார்வர்டுபிளாக் கட்சி தலைவர் கதிரவன் ஆகியோர் கூடி பேசினர். பின்னர் அனைத்து நிர்வாகிகளும் விஜயகாந்தை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

ஜெ., உருவ பொம்மை எரிப்பு : தே.மு.தி.க., தொண்டர்கள் ஆவேசம்: சென்னையில் தே.மு.தி.க., தொண்டர்கள் ஜெ., உருவ பொம்மையை எரித்தனர். அடுத்து என்ன செய்துவது என தே.மு.தி.க., கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு கூடிய இக்கட்சி தொண்டர்கள் ஜெ.,க்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து ஜெ., உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தினர்.

ஒரணியில் அணிதிரள வாய்ப்பு : அ.தி.மு.க, கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் தே.மு.தி.க., ம.தி.மு.க.,.இடதுசாரிகள் மற்றும் அதிருப்தியில் உள்ள இதர கட்சிகள் ஒரணியில் திரண்டு 3 வது அணியை அமைக்க யோசிப்பதாக தெரிகிறது. இப்படி முடிவு எடுக்கும் பட்சத்தில் தமிழக தேர்தலில் மும்முனை போட்டி உருவாகும். அ.தி.மு.க., தனித்து விடப்படும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...