|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

12 March, 2011

தேர்தல் புகார் கொடுக்கணுமா?-7598700298 எண்ணில் தொடர்பு கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுரை

சென்னை: தமிழகத்திற்கு வந்துள்ள தேர்தல் பார்வையாளர் வீடியோ காமிராவுடன் கண்காணிப்பில் ஈடுபடுவார். மேலும், அவரை பொது மக்களும், அரசியல் கட்சியினரும் தினமும் காலை 10 மணி முதல் 1 மணி வரை சந்தித்து புகார் கொடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக சட்டசபை தேர்தலை கண்காணிப்பதற்காக வெளிமாநில ஐ.ஜி.க்கள் 4 பேர் நேற்று தமிழகம் வந்துள்ளனர். இதில் ஹைதராபாத் பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. ஜிதேந்தர் வட மாவட்டங்களின் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று போலீஸ் அதிகாரிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அவர் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளார். அவரை பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் தினமும் காலை 10 மணி முதல் 1 மணி வரை சந்தித்து புகார் கொடுக்கலாம். நேரில் வர இயலாதவர்கள் 7598700298 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அவர்கள் புகார் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடு்க்கப்படும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...