|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

12 March, 2011

ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு திருப்பதியில் புதிய சலுகை

திருப்பதியில் தற்போது ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் நன்கொடை வழங்கும், பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் மற்றும் தங்கும் விடுதி போன்ற ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்து வருகிறது. இதைத் தொடர்ந்து, ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கும் பக்தர்கள் தங்களின் குடும்பத்தினர் ஐந்து பேர் வரை வாழ் நாள் முழுவதும் ஆண்டுக்கு மூன்று முறை வெங்கடேச பெருமாளை தரிசிக்க சிறப்பு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த மூன்று நாட்களிலும் திருமலையில் 2 ஆயிரத்து 500க்கான தங்கும் விடுதிகள் ஏற்பாடு செய்து தரப்படும். அதோடு ஒரு நாள் அதிகாலை சுப்ரபாத சேவை தரிசனத்துக்கான டிக்கெட் வழங்கப்படும். ஒரு கோடி ரூபாய் அளித்தவரின் குடும்பத்தினர் ஒருவரை ரங்கநாய மண்டபத்தில் அமரச் செய்து ஆசிர்வாதம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும். மேலும், ஏழுமலையான் உருவம் பொறித்த 5 கிராம் தங்க டாலர், 5 பெரிய லட்டுகள், மேல் வஸ்திரம், ரவிக்கை துணியுடன் மகா பிரசாதம் வழங்கப்படும். தேவஸ்தானம் செயல்படுத்தி வரும் வேத பரிரக்ஷண டிரஸ்ட்டிற்கு நன்கொடை அளிக்கும் பக்தர்களின் பெயரில் சீனிவாச மங்காபுரத்தில் சிறப்பு மகா யாகம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...