|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

12 March, 2011

ஜப்பான் அணு உலையில் வெப்பம் தாங்காமல் வெடிப்பு

இன்று மதியம் ஜப்பான் நேரப்படி 3. 40 நிமி‌டம் அளவில் புகுஷிமாவில் உள்ள ஒன்றாம் நம்பர் பிளாண்டில் பெரும் சப்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சீர் செய்யும் பணியில் இருந்த 4 பேர் காயமுற்றதாக ஜப்பானில் இருந்து வரும் செய்திகள் கூறப்படுகிறது. இந்த வெடிப்பின் காரணமாக எந்த அளவிற்கு சேதம் இருக்கும் என நிர்மாணிக்க முடியவில்லை. முன்னதாக இங்கு குளிரூட்டும் சாதனங்கள் மூலம் வெப்பம் கட்டுப்படுத்தப்பட்டதாக ஜப்பான் அரசு முடிவு செய்திருக்கிறது.

அணுமின் கசிவு அதிகாரிகள் விளக்கம்: புகுஷிமாவில் அணு மின் நிலையம் உள்ள பகுதியில் சற்று வாயு பரவியிருப்பதாக தெரிகிறது. இது குறித்து அணு மைய அதிகாரிகள் கூறுகையில்; சுனாமி காரணமாக இங்குள்ள 5 அணு உலைகளில் 1 சேதமடைந்திருக்கிறது. இதனால் அழுத்தம் காரணமாக இது அணு வெப்ப வாயு கசிந்துள்ளது. அணு கதிர் எதுவும் வெளியேறவில்லை. இது பெரும் ஆபத்து இல்லை இருப்பினும் 10 கி.மீட்டர் வரை வசிப்போர்கள் காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.

அவசர நிலை பிரகடனம்: இந்தப்பகுதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இங்கு வசிப்போர‌ை விமானம் மூலம் மீட்டு மாற்று இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். அணுவை பிளப்பதன் மூலம் ஏற்படும் வெப்பமூட்டும் கருவி வழக்கத்தை விட ஆயிரம் மடங்கு வெப்பம் வெளியேறி வருகிறது. இதனை கூல் செய்யும் நிலையில் உள்ள கருவிகள் தங்களுடைய பணிகளை சரிவர செய்யவில்லை இதனால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...