|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

24 March, 2011

டாக்டர் பட்டம் ஏற்க சச்சின் மறுப்பு

மைசூர் பல்கலைக்கழகம் வழங்கவிருந்த கௌரவ டாக்டர் பட்டத்தை ஏற்க இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் மறுத்துவிட்டார்.  இதுதொடர்பாக பல்கலைக்கழக துணை வேந்தருக்கு சச்சினின் மனைவி அஞ்சலி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.  அதில் சச்சினுக்கு டாக்டர் பட்டம் அறிவித்ததற்கு நன்றி தெரிவித்துள்ள அஞ்சலி, சச்சின் கிரிக்கெட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் எந்தவொரு டாக்டர் பட்டத்தையும் ஏற்பதில்லை என முடிவு செய்துள்ளார். அதனால் தாங்கள் வழங்கவிருந்த டாக்டர் பட்டத்தை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.  மைசூர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா ஏப்ரல் 10-ம் தேதி நடைபெறவுள்ளது. அப்போது கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படும் என்று அப்பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...