|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

18 May, 2011

ஐ.ஏ.எஸ்., இறுதித்தேர்வு முடிவு வெளியீடு; தமிழக மாணவர்கள் அபார சாதனை

முதல் மூன்றிடத்தில் தமிழகம் சாதனை:இதில், தமிழகத்தில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் தேர்வு பெற்றுள்ளனர். அகில இந்திய அளவில் முதல் மூன்று இடங்களையும், தமிழக மாணவர்கள் பிடித்து சாதனை படைத்துள்ளனர். முதலிடம் பிடித்த திவ்யதர்ஷினி, அம்பேத்கர் பல்கலையில் பி.ஏ.,-பி.எல்., ஹானர்ஸ் முடித்தவர். இரண்டாவது முயற்சியில், இவர் இத்தகைய சாதனையை செய்துள்ளார். இந்த வெற்றியை எனது பெற்றோர்களுக்கும், பயிற்சி அளித்த பிரபாகரன் ஐஏஎஸ் அகாடமியின் இயக்குநர் திரு. பிரபாகரன் அவர்களுக்கும் காணிக்கையாக்குகிறேன்.

என் பெற்றோர்கள் எனக்கு அதிக சுதந்திரமும் கொடுத்து, என் வெற்றிக்கு பெரிதும் ஆதரவாக இருந்தனர். நான் நிச்சயமாக ஐஏஎஸ் பணியின் மூலம் இந்த சமுதயாத்திற்கு சிறந்த சேவை ஆற்றுவேன். மேலும் ஊழலுக்கு எதிராக போராடுவேன்’’ என்று தெரிவித்தார்.
இரண்டாவது இடம், சுவேதா மொகந்தி என்பவருக்கு கிடைத்துள்ளது. இவர், ஐதராபாத்தில் உள்ள நேரு தொழில்நுட்ப பல்கலையில், பி.டெக்., (கம்ப்யூட்டர் சயின்ஸ்) படித்துள்ளார். மூன்றாவது முயற்சியில், இவர் வெற்றி பெற்றுள்ளார்.

சைதை துரைசாமி மனிதநேயம் இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தில் படித்த டாக்டர் வருண்குமார், தேசிய அளவில் மூன்றாவது இடம் பிடித்துள்ளார். இவர், சென்னையில் உள்ள ராகாஸ் மருத்துவக் கல்லூரியில் பி.டி.எஸ்., படித்துள்ளார்.இந்த பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 90 பேரில், 36 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில், 29 பேர் மாணவர்கள்; ஏழு பேர் மாணவியர். இந்த மையத்தில் பயின்ற அரவிந்த், அகில இந்திய அளவில் எட்டாவது இடமும், ராகப்பிரியா 28வது இடமும், மீர் முகமது 59வது இடமும், டாக்டர் கார்த்திகேயன் 118வது இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர். சீனிவாசன் என்ற மாணவர், முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றிருக்கிறார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...