|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

04 June, 2011

சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு: மதுரை ஆதீனம்

சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என மதுரை ஆதீனம் ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து, அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்: தமிழர்கள் பெருவாரியாக வாழும் இடங்களில் எல்லாம் தமிழ்ப் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். சித்திரை முதல் நாள்தான் தமிழ் ஆண்டின் தொடக்க நாள் ஆகும்.  இந்நாளில்தான் ஆதீனங்களிலும், திருமடாலயங்களிலும், பூஜைகள், வழிபாடுகள் சிறப்பாக நடைபெறும். மேலும், இந்த இடங்களில் அன்றுதான் பஞ்சாங்கம் வாசித்துக் காட்டுவதும் மரபாக இருந்து வருகிறது. அதில் நாட்டின் நிலை குறித்த பல்வேறு செய்திகள், வானிலை, பூமி தொடர்பான தகவல்கள், மழை குறித்த முன்னறிவிப்பு, விவசாயம், அரசின் மக்கள் நல நடவடிக்கைகள் போன்றவை விரிவாக எடுத்துரைக்கப்படும்.  எனவே, சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டுக்கு பொருத்தமான நாள் ஆகும் என்றார் ஆதீனம்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...