|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

29 July, 2011

சிக்கலில் இன்னொரு அமெரிக்க பல்கலைக்கழகம்!

அமெரிக்காவில் விதிமுறைகளை மீறி அதிக அளவில் மாணவர்களை சேர்ததற்காக பிரச்சனையில் சிக்கியுள்ளது நார்தர்ன் வெர்ஜீனியா பல்கலைக்கழகம்( University of Northern Virginia). வாஷிங்டனில் உள்ளது நார்தர்ன் வெர்ஜீனியா பல்கலைக்கழகம். அங்கு 2 ஆயிரத்து 400 மாணவ-மாணவியர் படிக்கின்றனர். இதில் 2 ஆயிரம் பேர் இந்தியர்கள். அதில் பெரும்பாலானவர்கள் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

நார்தர்ன் வெர்ஜீனியா பல்கலைக்கழகம் விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக மாணவர்களை சேர்த்துள்ளதை அமெரிக்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். சமீபத்தில்தான் கலிபோர்னியாவில் ட்ரை வேலி பல்கலைக்கழகம் விதிமுறைகளை மீறி அதிக மாணவர்களை சேர்த்ததால் அது மூடப்பட்டு பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. மேலும் அந்த பல்கலைக்கழகத்தில் படித்த இந்திய மாணவர்களின் கால்களில் ரேடியோ டாக் கட்டப்பட்டு கண்காணிக்கப்பட்டதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தற்போது இன்னொரு அமெரிக்க பல்கலைக்கழகம் மோசடியில் ஈடுபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் முந்தைய சம்பவம் போல இந்த முறை அமெரிக்க அதிகாரிகள் அவசரப்படவில்லை. அதனால் தான் நார்தர்ன் வெர்ஜீனியா பல்கலைக்கழகத்திடம் விளக்கம் கேட்டு அதுவும் 1 மாத கால அவகாசமும் கொடுத்துள்ளனர். மேலும், அங்கு படிக்கும் மாணவர்கள் அங்கேயே தொடரலாம், அல்லது வேறு பல்கலைக்கழகங்களுக்கு மாறிக்கொள்ளலாம் அல்லது இந்தியாவுக்கு திரும்பலாம் என்று கூறப்பட்டுள்ளது. இம்முறை மாணவர்கள் மீது கைது நடவடிக்கையோ, ரேடியோ டாகோ இருக்காது என்று இந்திய தூதரகத்திடம் அமெரிக்க அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

மேலும் இந்த பல்கலைக்கழகத்தில் படித்து வரும் இந்திய மாணவர்களின் விசா ரத்து செய்யப்படமாட்டாது. அவர்கள் அந்த விசாவை வைத்துக் கொண்டே வேறு பல்கலைக்கழகத்தில் சேர வேண்டும். இல்லையெனில் நாடு திரும்ப வேண்டும்.

நார்தர்ன் வெர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இந்த செய்தி கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...