|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

16 July, 2011

சாப்பிட்டவுடன் சும்மா இருங்கள்!

உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு' என்று சொல்வதைக் கேட்டிருப்பீர்கள்.  நன்றாகச் சாப்பிட்டவுடன் தூக்கம் கண்களை இழுத்தால், முகத்தில் தண்ணீரை அடித்துத் தூக்கத்திலிருந்து தப்பியுங்கள். அரை மணி நேரம் கழித்து படுக்கச் செல்லுங்கள். அப்போதுதான் நன்கு செரிக்கும். சாப்பிட்டவுடன் ஒரு பழம் சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். மலச்சிக்கல் இல்லாமல் போகும் என்பது அவர்களுடைய நம்பிக்கை.  சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்போ, பின்போதான் பழம் சாப்பிட வேண்டும். சாப்பிட்டவுடன் பழம் சாப்பிட்டால் வயிற்றுக்குள் காற்று சென்று வயிறு உப்புசத்திற்கு உள்ளாகும்.


 சாப்பிட்டவுடன் சிறிது தூரம் நடந்தால் நல்லது என்பார்கள். அப்படி நடக்கக் கூடாது. ஏனென்றால் சாப்பிட்டவுடன் செரிமான உறுப்புகளுக்குச் செல்ல வேண்டிய ரத்தம், கால்களுக்குச் சென்றுவிடும். உணவில் உள்ள சத்துகள் முழுமையாக ரத்தத்தில் கலப்பதற்கு சாப்பிட்டவுடன் நடப்பது இடைஞ்சல் செய்யும்.  சாப்பிட்டவுடன் "தம்' சிலர் அடிப்பார்கள்.  சாப்பிட்டவுடன் புகைக்கும் 1 சிகரெட்டால் ஏற்படும் புற்றுநோய் அபாயம் 10 சிகரெட்டால் ஏற்படும் அபாயத்துக்குச் சமமாம்.  சாப்பிட்டவுடன் என்னதான் செய்வது?
 சும்மா இருக்கலாமே?

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...