|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

22 August, 2011

அஞ்சல் துறையின் முகவரிச்சான்று நிறுத்தம்!

ஓட்டுனர் உரிமம், குடும்பப அட்டை, கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்), நிரந்தர கணக்கு எண் (பாண் கார்டு) போன்ற எந்த அடையாள ஆவணமும் இல்லாத இந்திய குடிமக்களுக்கு ஒரு அடையாள அட்டை வேண்டும்  என்றால், அவர்கள் பக்கத்தில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் சென்று பத்து ரூபாய் பணம் செலுத்தி ஒரு விண்ணப்பம் வாங்கி,

அதை நிரப்பி அஞ்சலகத்தில் 240 கட்டணத்துடன் அந்த விண்ணப்பத்தை கொடுத்தால், அஞ்சலகத்திலிருந்து வரும் ஒரு அலுவலர் நம்முடைய முகவரியை விசாரித்து உறுதிசெய்து நமக்கு ஒரு அடையாள அட்டை வழங்குவார்கள் இதை நாம் ஒரு அடையாள ஆவணமாக பயன் படுத்திக்கொள்ளலாம்.இந்த அடையாள அட்டை மூன்று ஆண்டு காலம் வரை  பயன்படுத்திக்கொள்ளலாம்.   மூன்று ஆண்டுகளூக்கு பிறகு  தேவைப்பட்டால் அதை மறுபடியும் 140 ரூபாய் கட்டணம் செலுத்தி புதுப்பித்துக்கொள்ளும் வசதியும் இருந்தது.

ஆனால், முகவரிச்சான்றுகள் வழங்கும் பணி உடனடியாக நிறுத்தும் படி அஞ்சலகங்களுக்கு கடந்த ஆகஸ்டு முதல் தேதியன்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.  இனி வரும் வாடிக்கையாளர்களிடம், முந்தைய திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது என்றும், புதிதாக சில கூடுதல்  விவரங்களுடன் சேர்த்து புதிய அட்டை வழங்கப்படும், இப்போதுள்ள கட்டணம் குறைக்கவும் வாய்ப்புள்ளது என்றும் சொல்லும் அலுவலர்கள் புதிய அட்டை எப்போது கொடுக்கப்படும் என்பது தெரியாது என்கிறார்கள்.  

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...