|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

08 November, 2011

ஐஐஎம்-கே மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் வாய்ப்பு!


கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு மிகப்பெரிய நிறுவனங்களில் கோடைக்கால பயிற்சி மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.சிட்டி பேங்க், குளிர்பான நிறுவனங்கள், எம்.என்.சி.க்கள், ஐ.பி.எல். டீம்களில் இருந்தும், ஐ.ஐ.எம்.-கேவில் பிஜிபி படிக்கும் மாணவர்களுக்கு கோடைக்கால பயிற்சி மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 343 மாணவர்கள் பெரிய பெரிய நிறுவனங்களில் பயிற்சி பெற்று வருகின்றனர்.
ஐஐஎம்-மில் வழங்கப்படும் இரண்டு ஆண்டு கால முதுகலை பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டில் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் 8 வார கால இன்டர்ன்ஷிப் மேற்கொள்ள வேண்டும். இம்முறைதான் அனைத்து மாணவர்களும் உதவித் தொகையுடன் கூடிய பயிற்சியை மேற்கொள்கின்றனர் என்று ஐஐஎம்-கேவின் பேராசிரியரும், பணியமர்த்தல் துறை நிர்வாகியுமான ஸ்ரீதர் தெரிவித்தார்.இதுவரை 15 குழுக்களாக மாணவர்கள் இன்டர்ன்ஷிப் பெற்றுள்ளளனர். 35 புதிய நிறுவனங்களுடன் சேர்ந்து 100 கம்பெனிகளில் மாணவர்கள் பயிற்சி மேற்கொள்கின்றனர். ஒவ்வொரு நிறுவனமும் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இது வரவேற்கத்தக்கதாகும் என்றார் அவர்.ஐஐஎம் கோழிக்கோடு மாணவர்களின் கல்வித் திறன், செயல்பாடு, அவர்களது பயிற்சி அனுபவம் ஆகியவற்றால் மாணவர்களை தேர்வு செய்ய வந்திருந்த நிர்வாகிகள் மிகவும் கவரப்பட்டனர்.இந்தியாவில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஆக்ஸி பேங்க், காக்னிசென்ட் போன்ற பெரிய நிறுவனங்களிலும், ஹாங்காங், லண்டன், துபாயைச் சேர்ந்த நிறுவனங்களிலும் மாணவர்கள் இன்டர்ன்ஷிப் பெற்றுள்ளனர் என்று ஸ்ரீதர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...