|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

15 December, 2011

தேசிய விருதை கவுரவமாக நினைக்கக்கூடாது; முகத்தில் வீசி எறிய வேண்டும் தங்கர்பச்சான்.

சென்னையில் ‘கொள்ளைக்காரன்’ பட விழாவில் இயக்குநர்கள் செல்வமணி, தங்கர்பச்சான், அமீர், கவிஞர் வைரமுத்து உட்பட பலர் கலந்துகொண்டனர்.விழாவில் தங்கர்பச்சான், ’’தமிழன் எப்படி வஞ்சிக்கப்படுகிறானோ?  அதே மாதிரி தமிழ் சினிமாவும் புறக் கணிக்கப்படுகிறது.    தேசிய விருதை நாம் கவுரவமாக நினைத்துக்கொள்ளக்கூடாது.   மத்திய அரசு நமக்கு கொடுத்திருக்கும் தேசிய விருதுகளை நாம் தூக்கி வீசுவோம். எனக்கு அப்படி ஒரு  விருது கொடுத்திருந்தால், முகத்தில் வீசி எறிந்திருப்பேன்.   என்றைக்கு காவேரி பிரச்சனை தீர்க்கப்படுகிறதோ?  என்றைக்கு முல்லைப்பெரியாறு பிரச்சனை தீர்க்கப்படுகிறதோ?  என்றைக்கு தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது நிறுத்தப்படுகிறதோ?  அன்றைக்கு வாங்கிக்கொள்வோம் தேசிய விருதுகளை’’ என்று ஆவேசமாக பேசினார். அவர் மேலும்,   ‘’டெல்லியில்தான் நம்மை மதிக்கமாட்டேங்கிறார்கள்.  நம்மை நாமே ஒதுக்கி வைப்பதுதான் வேதனை. சென்னையில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் அனைவராலும் பாராட்டப்பெற்ற தென்மேற்கு பருவக்காற்று, செங்கடல் படங்கள் தேர்வாகவில்லை’’ என்று பேசினார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...