|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

12 December, 2011

மாணவ-மாணவியருக்கு பள்ளிக் கல்வி உதவித்தொகை...


பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த மாணவ-மாணவியருக்கு பள்ளிக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் மாதந்தோறும் உதவித் தொகை வழங்க முதல்வர் ஜெயலலிதா ரூ.11 கோடியே 32 லட்சம் வழங்கியுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,  பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த மாணவ-மாணவியருக்கு பள்ளிக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின்கீழ், விடுதியில் தங்காமல் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ/ மாணவியர்களுக்கு மாதம் ரூ.25/- வீதம் 10 மாதங்களுக்கும், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ/ மாணவியர்களுக்கு மாதம் ரூ.40/-வீதம் 10 மாதங்களுக்கும், 9ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு மாதம் ரூ.50/- வீதம் 10 மாதங்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

இதேபோன்று விடுதியில் தங்கி 3ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியர்களுக்கு மாதம் ரூ.200/- வீதம் 10 மாதங்களுக்கும், 9ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ- மாணவியர்களுக்கு மாதம் ரூ.250/- வீதம் 10 மாதங்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இது தவிர தனி மானியமாக ஆண்டொன்றுக்கு ரூ.500/- வழங்கப்படும். ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த மாணவ/மாணவியர் இதனால் பயனடைவார்கள். இதற்கென ரூ.11 கோடியே 32 லட்சம் ஒப்பளிப்பு வழங்கி முதல்வர் ஜெயலலிதா உத்திரவிட்டுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...