|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

11 March, 2012

இரும்புச் சத்து நிறைந்த வாழைப்பழம் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி!

இரும்புச் சத்து குறைபாட்டைப் போக்கும் வாழைப்பழத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.  ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் இந்திய உயிரிதொழில்நுட்பத் துறையினரும் (டிஒபி) இதற்கான முயற்சியில் மேற்கொண்டுள்ளது.  இதற்கான ஒப்பந்தம், பல்கலைக்கழக துணைவேந்தர் பீட்டர் கோல்ட்ரக் மற்றும் டிஒபியைச் சேர்ந்த ரேணு ஸ்வரூப் ஆகியோர் முன்னிலையில் வியாழக்கிழமை கையெழுத்தானது. "வேறு நாட்டில் விவசாயம் சம்பந்தமாக ஆராய்ச்சியில் இந்தியா ஈடுபடுவது இதுவே முதல்முறை.  இந்த ஆராய்ச்சியின் மூலம் ரத்தசோகையை போக்கும் வகையிலான வாழைப்பழம் இன்னும் நான்கு ஆண்டுகளுக்குள் கண்டுபிடிக்கப்படும்' என்று ஸ்வரூப் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...