|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

26 April, 2012

பி ஃபார் பாம், சி ஃபார் சாக்கு(கத்தி)

உத்தரப் பிரதேச பள்ளிகளில் மாணவர்களின் புத்தகங்களில் இடம்பெற்றுள்ள பாடங்கள் பெற்றோர்களிடையே அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.நாம் படிக்கும்போது ஏ ஃபார் ஆப்பிள் பி ஃபார் பால், சி ஃபார் கேட் என்றுதான் படித்திருப்போம். ஆனால் உத்தரப் பிரதேச பாடங்களில் பி ஃபார் பாம்(வெடிகுண்டு), சி ஃபார் சாக்கு(கத்தி) என்று இடம்பெற்றுள்ளது.தனியார் நர்சரி பள்ளிகளின் பாடங்களில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் இதுகுறித்து பள்ளிகளின் முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களின் கவனத்துக்குக் கொண்டுசென்றனர்.இது தற்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் புத்தக வெளியீட்டு நிறுவனமான பிரிஸம் ஹவுஸ் பப்ளிகேஷன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.இந்த விவகாரம் குறித்து ஸ்ருதி அகுஜா என்பவர் கூறுகையில், இதை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. மிகவும் சிறிய வயதில் உள்ள குழந்தைகளுக்கு இதுபோன்ற வார்த்தைகளை கற்றுக்கொடுப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்று கேள்வி எழுப்பினார்.சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின்கீழ் இந்த பாடம் கற்பிக்கப்படுவதால் சிபிஎஸ்சி நிர்வாகிகளும் இதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். 32 பக்க புத்தகத்தின் வெளியீட்டாளருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சிபிஎஸ்சி நகர ஒருங்கிணைப்பாளர் ஜாவீத் ஆலம் தெரிவித்தார்.
இது ஒரு குளறுபடி என்றால் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான புத்தகம் ஒன்றில் இந்தியாவின் மூவர்ண தேசியக் கொடி 5 இடங்களில் தலைகீழாக அச்சடிக்கப்பட்டுள்ளது.இந்த 2 விவகாரங்களும் உத்தரப் பிரதேச கல்வித்துறையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...