|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

14 May, 2012

பாதாளம் நோக்கி பணம்!

தீவிரவாதம், பட்ஜெட், கூடங்குளம், எம்.பி.க்கள் இலங்கை செல்வது, ஜெ -விஜயகாந்த் பிரச்னை, ஜெசசி இணைப்பு, தி.மு.க உள்கட்சி மோதல் இது போன்ற தேசிய, மாநில செய்திகளுக்கு இடையே யாருடைய கவனத்தையுமே பெறாமல் ஒரு பிரச்னை மெல்ல மெல்ல ஊதி பெரிதாகிக் கொண்டே வருகிறது. யார் கவனத்தையும் ஈர்க்காமல் போன செய்தி.. சரிந்து வரும் ரூபாயின் மதிப்பு தான்.பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள்.. இப்போது நம் இந்திய ரூபாயின் மதிப்பு பாதாளம் நோக்கி போய்க் கொண்டிருப்பது கவலைப்படவேண்டிய விஷயம்.கடந்த ஜனவரி மாதம் முதல் உயர்ந்து வந்த இந்திய ரூபாய், இப்போது (மே 02) மீண்டும் சரிந்து ஒரு டாலருக்கு நிகராக கிட்டத்தட்ட 53 ரூபாய் என்ற அளவில் வர்த்தகம் ஆகிறது. கடந்த வருடம் ஜூலை மாதத்தில் ஒரு டாலர் 44 ரூபாய் என்ற அளவில் தான் இருந்தது. இதை விட 2008 ஆண்டின் ஆரம்பத்தில் ஒரு டாலர் 40 ரூபாய்க்கு கீழே கூட இருந்தது.


ஏன் சரிகிறது ரூபாய்? எந்த ஒரு பொருளின் விலையையும் தீர்மானிப்பது சப்ளை மற்றும் டிமாண்ட் தான். பொருளின் வரத்து அதிகரிக்கும் போது அதன் மதிப்பு (விலை) குறைவதும், தேவை அதிகரிக்கும் போது உயர்வதும் இயல்பே. நாம் வாங்கும் பொருட்களுக்கு இதை எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ரூபாயோடு ஒப்பிடும் போது குழப்பமாக இருப்பது போல தெரியும். ஆனால் எல்லாமே சப்ளை டிமாண்ட் தியரி தான்.இந்தியாவுக்கு வரும் டாலரின் மதிப்பைப் பொருத்து தான் இந்திய ரூபாய்க்கும் அமெரிக்க டாலருக்குமான மதிப்பு இருக்கிறது. இதே கதைதான் அனைத்து நாட்டு கரன்சிகளுக்கும் என்றாலும் டாலர் தான் பிரதானமான கரன்ஸியாக கொள்ளப்படுகிறது. நம்முடைய அரசு மற்றும் நம் நிறுவனங்களின் பெரும்பாலான வர்த்தகங்கள் டாலரில் நடப்பதால் தான் டாலர் அதிக கவனம் பெறுகிறது.ரூபாய் சரிய முதல் காரணம் நம்முடைய இறக்குமதி சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அதாவது நாம் செய்யும் ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகம். நடந்து முடிந்த மார்ச் நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதியை விட இறக்குமதி 185 பில்லியன் டாலர்கள் அதிகமாக இருக்கிறது. ( ஒரு பில்லியன்  100 கோடி, 1 டாலர் சுமாராக 53 ரூபாய்) இவ்வளவு பில்லியன் டாலர் வெளியே செல்லும் போது, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் சரிவடையத்தான் செய்யும்.


மூன்றாவது என்.ஆர்.ஐ.களின் பங்கு. இது சிறிதளவு தான் என்றாலும் கணிசமானது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முடியும். சில மாதங்களுக்கு முன்பு வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு (NRI) டெபாசிட்களுக்கு சுமார் 10 சதவிகித வட்டி கிடைத்தது.  சில நாட்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கி ரெபோ விகிதத்தை 0.50 சதவிகிதம் குறைத்தது. (அதாவது வங்கிகள், ரிசர்வ் வங்கியிடம் இருந்து வாங்கும் கடனுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டது. இதன் காரணமாக வங்கிகளிடம் நாம் வாங்கும் கடனுக்கு வட்டி விகிதம் குறையும், அதேபோல நாம் செய்யும் டெபாசிட்களுக்கு வட்டி விகிதம் குறையும்). இப்படி டெபாசிட்களுக்கு வட்டி விகிதம் குறையும் போது வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் முதலீடு செய்வதை குறைத்துவிடுவார்கள்.


ஆக மொத்தம் இங்கிருந்து நிறைய டாலர் வெளியே செல்கிறது. டாலரில் உள்ளே வரும் முதலீடுகளும் குறைந்ததன் காரணமாக ரூபாய் தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. தற்போது 53 ரூபாய்க்கு வர்த்தகமாகும் ஒரு டாலர், 55 ரூபாய்க்கு மேலே செல்லக் கூட வாய்ப்பிருக்கிறது.இறக்குமதி அதிகரித்ததன் காரணமாக ரூபாய் சரிகிறது. அதற்காக, நம் இறக்குமதியை நிறுத்த முடியாது. இறக்குமதி செய்து கொண்டேதான் இருக்கவேண்டும் அப்போது மேலும் ரூபாய் சரியும். நாம் இறக்குமதி செய்யும் பொருளின் விலை உயர்ந்து கொண்டே இருக்கும். இதில் முக்கிய பங்கு வகிப்பது, குரூட் ஆயில், தங்கம், நிலக்கரி போன்றவை தான். ரூபாய் மதிப்பு சரிய சரிய அதிக ரூபாய் கொடுத்து நாம் வாங்க வேண்டி இருக்கிறது.ரூபாய் சரிவு என்பது அரசாங்கத்தை மட்டுமல்ல, சாதாரண மக்களையும் வெகுவாக பாதிக்கிறது. ரூபாய் மதிப்பு சரிவதால் நன்மையே இல்லையா என்றால், இருக்கத்தான் செய்கிறது. உதாரணத்துக்கு நாம் ஏற்றுமதி செய்யும் பொருளுக்கு அதிக விலை கிடைக்கும். டெக்னாலஜி மற்றும் டெக்ஸ்டைல் துறையைச் சேர்ந்தவர் மற்றும் ஏற்றுமதியை நம்பிருக்கும் நிறுவனங்களுக்கு ரூபாயின் சரிவு சாதகமாக இருக்கும்.நம் நாட்டு நிலமை இப்படி இருக்க, மற்றொரு 'வளர்ந்து வரும்'  நாடான சீனாவில் இந்த பிரச்னை இருக்கிறதா? கரன்ஸி விஷயத்தில் சீனா எப்படி அதை அணுகுகிறது?இது குறித்து சென்னை பல்கலைக்கழகத்தின் பொருளாதார பேராசியர் ஸ்ரீனிவாசனிடம் கேட்டோம். 



அதிக அளவு டாலர்கள் இங்கிருந்து வெளியே செல்வது ஒரு பிரச்னை என்றால், சாதாரணமாக உள்ளே வரும் வெளிநாட்டு முதலீடுகளும் இப்போது குறைந்து வருகிறது. பங்குச்சந்தை சமீபகாலத்தில் பெரிய வருமானத்தை கொடுக்கவில்லை என்பதால் அதிக முதலீடுகள் உள்ளே வருவதில்லை. மேலும் பங்குச்சந்தை சரி இல்லாததால் வெளிநாட்டு முதலீடுகளை இங்கிருந்து எடுத்து டாலராக மாற்றி வெளிநாடுகளுக்கு எடுத்து செல்கிறார்கள். இதன் காரணமாக டாலருக்கு தேவை அதிகரிக்கிறது.அவர், '' இந்திய கரன்ஸி 'டைனமிக்’கானது. அதாவது சப்ளை மற்றும் டிமாண்டுக்கு ஏற்ப மாறிக் கொண்டிருக்கிருக்கும். ஆனால் சீனா 'பிக்ஸட் கரன்ஸி சிஸ்டத்தை' வைத்திருக்கிறது. ஒரு டாலருக்கு 6.3 யூவான் என்ற நிலையில் தான் கடந்த சில மாதங்களாக வர்த்தகமாகிக்கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் சீனா ஏற்றுமதியை அதிகளவு நம்பி இருக்கிறது. ஏற்றுமதியை அதிகளவு நம்பியிருக்கும் போது மற்ற நாட்டு கரன்சிகளுக்கு எதிராக பலவீனமாக இருந்தால் தான் அதிக வருமானம் கிடைக்கும். அதைத் தான் சீனா செய்துக்கொண்டிருக்கிறது.


ஆனால் பல நாடுகள் சந்தை மதிப்புக்கு மாறச்சொல்லி சீனாவை வற்புறுத்தி வருகிறது. ஆனால் சீனா மசியவில்லை. ஒரு வேளை சீனா அப்படி மாறி இருந்தால், அமெரிக்க டாலருக்கு நிகரான யூவானின் மதிப்பு தற்போதைய நிலையை விட அதிகமாகதான் இருக்கும். அதனால் இப்போதைக்கு சீனாவுக்கு பிரச்னை இல்லை" என்று விளக்கினார்.நம் ரூபாயின் மதிப்பு குறையாமல் இருக்க ஒன்று டாலர் வரத்து அதிகமாக இருக்க வேண்டும், இங்கிருந்து வெளியே செல்லும் டாலர் குறைவாக இருக்க வேண்டும்.வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இங்கு முதலீடு செய்வதும், வெளிநாட்டு இந்தியர்கள் இங்கு முதலீடு செய்வதும் நம் கையில் இல்லை. ஆனால், நாம் நினைத்தால் இறக்குமதியை ஓரளவுக்கு கட்டுப்படுத்தலாம். தங்கம், அனைத்து கரன்சிகளுக்குமான மாற்று என்பதால் அதை இறக்குமதி செய்வது கூட தவறில்லை. ஆனால் குரூட் ஆயில் இறக்குமதியை நாம் நினைத்தால் குறைக்கலாம்.மேலும், பொதுப் போக்குவரத்தை மத்திய மாநில அரசுகள் ஊக்குவிக்கலாம். குஜராத்தில் ஒரு நகரத்தில் பேருந்துகள் செல்வதற்கென்று தனியாக ஒரு 'லேன்’ இருக்கிறது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் இல்லாமல் விரைவாக இலக்கை அடைய முடியும். இதை அனைத்து ஊர்களுக்கும் கொண்டுவந்து பொதுப் போக்குவரத்தை விரிவுபடுத்தி, பெட்ரோல் பயன்பாட்டை குறைக்க முயற்சியாவது செய்யலாம்.செய்யுமா நம் அரசு?

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...