|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

12 October, 2012

மன்னியுங்கள் ஐயா!

திமுக ஆட்சியில் இரண்டு மணி நேரம் மின்வெட்டு இருந்த போது, அப்போது மின்துறை அமைச்சராக இருந்த ஆற்காடு வீராச்சாமியை மக்கள் கண்டபடி திட்டி தீர்த்தார்கள்.இரண்டு மணி நேர மின் வெட்டிற்கே, அப்போது அப்படி திட்டி தீர்த்த பொதுமக்கள் இப்போது 16 மணி நேரம் வரை மின்வெட்டாவதை எப்படி பொறுத்துக்கொள்கிறார்கள் என்பது நியாயமான கேள்விதான்.,பொறுத்துக்கொள்ளவில்லை புலம்பி தீர்க்கிறார்கள் என்பதுதான் நிஜம்.இன்றைய மின்வெட்டை பார்க்கும் போது அன்றைய வீராச்சாமியை ரொம்பவே திட்டிவிட்டோமோ என வருத்தப்பட்ட மக்கள் அவரிடம் மன்னிப்பு கேட்பது போல குமாரபாளையத்தில் வைத்துள்ள பேனர் பலரையும் கவர்ந்துள்ளது.வேதனையைக்கூட வேடிக்கையாக வெளிப்படுத்த முடியும் என்பதன் வெளிப்பாடான இந்த போஸ்டர் தற்போது தமிழகம் முழுவதும் பாப்புலராகிவிட்டது

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...