|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

15 March, 2013

படிச்சிட்டு யாரும் சிரிக்கக்கூடாது..


எனது தந்தை கருணாநிதி தனது 14-வது வயதில் இந்தி எதிர்ப்பு 

போராட்டத்தில் கலந்து கொண்டார்- டெல்லி மேல்-சபையில் கனிமொழி எம்.பி. பேச்சு நாங்கள் விரும்பாதபோது இந்தியை எங்கள் மீது திணிக்க நடந்த முயற்சியைக் கண்டித்தே இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. தங்கள் மொழியையும், கலாச்சாரத்தையும் பண்பாட்டையும், தங்கள் அடையாளத்தையும் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக உயிரை மாய்த்துக்கொண்டார்கள். ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், எனது தந்தையும், திமுக தலைவருமான கருணாநிதி தனது 14-வது வயதில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் அரசியல்வாதி கிடையாது. ஒரு சாதாரண மாணவன். தனக்கு ஒரு பிரகாசமான அரசியல் எதிர்காலம் இருக்கிறது என்பதோ, தமிழகத்துக்கே முதல்வர் ஆகப்போகிறோம் என்பதோ, தேசிய அரசியலில் ஒரு முக்கியப் பங்கை வகிக்கப் போகிறோம் என்பதோ, அவருக்கு அப்போது தெரியாது. அவருக்கு ஜோதிடத்தில் நம்பிக்கையும் கிடையாது. அப்படிப்பட்ட தலைவர்களை நீங்கள் அவமானப்படுத்தக்கூடாது. இது போன்ற போராட்டங்களில் அவர் எங்கள் அடையாளத்தை பாதுகாக்கவே இறங்கினார். அப்படிப்பட்ட தலைவர்களின் போராட்டங்களை அரசியல் தந்திரங்கள் என்று கூறுவது வருந்தத்தக்கது இவ்வாறு கனிமொழி. 

# Karunanidhi was born on June 3, 1924.அவருக்கு 14 வயது என்றால் 

1938.அப்போது இந்தியா சுதந்திர நாடே அல்ல.இந்தி எதிர்ப்பு போராட்டம் 

நடந்தது 1965ல் அப்போது கருணாநிதியின் வயது 36.

திரும்பவும் மேலே இருக்கும் போஸ்ட்டை படிங்க! ஹாஹ்ஹா

"எத்தனை வேசம் போட்டாலும் மண்ட மேல இருக்கிற கொண்டைய 

மறைக்கத் தெரியலையே!"


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...