|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 March, 2013

அதுவரை நாம் ஒயபோவதில்லை!


தெருவில் செல்கையில்
ஒருவன் இடித்துச் சென்றாலே
கோபம் வரும்
இவனென் சகோதரிகளை
துணியவிழ்த்து
படம் பிடித்து
எள்ளிநகைத்து
இழுத்து லாரியில் வீசுகிறான்,
கையை உடைக்க வேண்டாமா
காரி உமிழ வேண்டாமா
கொன்று புதைக்க வேண்டாமா

என் தாயைக் கொன்ற
என் மகனை கருவறுத்த
என் மனைவியை கொன்ற
என் சகோதரியை
நிர்வாணப் படுத்தியதொரு
கோபத்தை
பலி தீர்க்கும் வரை ..
அங்கே கடைசித் தமிழனொருவன்
சுதந்திரக் காற்றை
சுவாசிக்கும் வரை - இங்கே
நாம் ஒயபோவதில்லைஎன்று
உலகிற்கு உணர்த்துவோம்

ஈழதமிழன் சிந்திய
ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும்
ஈன சிங்கள இனம்
பதில் சொல்லும் காலம் வரும்.
பலி வாங்கியே தீருவோம் ..!

அதுவரை நாம் ஒயபோவதில்லை ..!
 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...