|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

11 March, 2011

இந்தியர்களின் சம்பளம் இந்தாண்டில் 12.9 சதவீதம் உயருகிறது

புதுடில்லி : இந்தியாவில் உள்ள தொழிலாளர்களுக்கு, இந்தாண்டில் 12.9 சதவீதம் அதிக சம்பளம் பெற இருப்பதாக ஏஆன் ஹெவிட் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில், ஹெச்ஆர் கன்சல்டன்சி சேவை வழங்குவதில் முன்னணியில் உள்ள ஏஆன் ஹெவிட் நிறுவனம், 2011ம் ஆண்டில் அதிக சதவீத சம்பளம் பெறும் நாடுகள் குறித்து சமீபத்தில் கருத்துக்கணிப்பு நடத்தியது. அதன் முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இந்தியா முதலிடத்திலும் (12.9 சதவீதம்), சீனா இரண்டாம் இடத்திலும் ( 9 சதவீதம்) மற்றும் பிலிப்பைன்ஸ் (7 சதவீதம் ) மூன்றாம் இடத்திலும் உள்ளது. இதுகுறித்து பத்திரிகையாளர்களை சந்தித்த ஏஆன் ஹெவிட் இந்தியா நிறுவனத்தின் உயர் அதிகாரி நிதின் சேத்தி கூறியதாவது, சர்வதேச அளவில், இந்த பட்டியலில் , இந்தியா முதலிடம் பிடித்ததற்கு காரணம் நாட்டின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையுடன் உள்ளதாலும், இதன்காரணமாகவே, அனைத்து முன்னணி நிறுவனங்களும், இந்தியாவில் வர்த்தகம் மேற்கொள்ள முயன்று வருவதாக அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...