|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

11 March, 2011

தமிழகத்தில் புலிகள் முகாம் இருப்பதாக கோத்தபயாதான் சொன்னார்-இலங்கை பிரதமர் பல்டி

கொழும்பு:தமிழகத்தில் விடுதலைப் புலிகள் முகாம்கள் இருப்பதாக நான் சொல்லவில்லை, கோத்தபயா ராஜபக்சேதான் கூறினார் என்று 'எல்கேஜி' பிள்ளைகள் 'மிஸ்'ஸிடம் பேசுவது போல பேசியுள்ளார் இலங்கைப் பிரதமர் ஜெயரத்னே.


தமிழகத்தில் விடுதலைப் புலிகள் முகாம்கள் இருப்பதாக ஜெயரத்னே கூறியிருந்தார். இதை உடனடியாக தமிழக காவல்துறை டிஜிபி லத்திகா சரண் மறுத்துப் பதிலளித்தார். ஜெயரத்னே சொல்வது அடிப்படை ஆதாரமற்ற பேச்சு என்றும் அவர் கூறியிருந்தார்.

இதையடுத்து ஜெயரத்னே பல்டி அடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,புலிகளின் உளவுப்பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானின் உதவியாளரான புகழேந்திரன் என்பவர் தலைமையில் தமிழகத்தில் மூன்று பயிற்சி முகாம்கள் செயல்படுவதாக கோத்தபய ராஜபக்சே தெரிவித்த தகவலையே நான் வெளியிட்டேன் என்று கூறி கோத்தபயா மீது பழியைப் போட்டு விட்டு தான் நழுவியுள்ளார் ஜெயரத்னே.

வாயில் வந்ததையெல்லாம் பேசுவது, பின்னர் மறுப்பது. இதுவே இலங்கையின் சமீபத்திய வேலையாகியுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...