|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

22 March, 2011

5 ஆயிரம் பாக். ரசிகர்கள் இந்தியா வருகை

பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் 5 ஆயிரம் பேர்கள் இந்தியா வருவதற்கு விசா வழங்கப்பட்டுள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கால் இறுதி ஆட்டம் ஆமதாபாத்தில் வருகிற 24ந் தேதியும், 2வது அரை இறுதிப் போட்டி மொகாலியில் வருகிற 30ந் தேதியும், இறுதிப் போட்டி மும்பையில் ஏப்ரல் 2ந் தேதியும் நடக்கிறது.
இந்த ஆட்டங்களை நேரில் காண பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் 5 ஆயிரம் பேர்கள் இந்தியா வருவதற்கு விசா வழங்கப்பட்டுள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டை காண்பித்த ரசிகர்களுக்கு தேவையான சோதனைகளுக்கு பின்னர் 15 நாள் விசா அளிக்கப்பட்டு இருக்கிறது என்று அரசு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...