|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

08 March, 2011

மகளிர் தினத்தன்று மாணவி சுட்டுக் கொலை


புதுடில்லி : டில்லியில் கல்லூரி மாணவி ஒருவர் கல்லூரி வாசலிலேயே மர்ம நபரால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு டில்லி, சாந்திநிகேதன் பகுதியில் இருக்கிறது ராம்லால் ஆனந்த் கல்லூரி. இக்கல்லூரியில் 2ம் ஆண்டு படிக்கும் மாணவி ராதிகா தன்வார். இவர் இன்று காலை 10.20 மணியளவில் கல்லூரியில் இருந்து வெளியில் வரும் போது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அந்த மாணவி படுகாயமடைந்தார். உடனடியாக டில்லி ராம் மனோகர் லொஹாரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். மாணவி மீது துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இன்று சர்வதேச மகளிர் தினம் அனுசரிக்கப்படுகிறது. மகளிர் தினத்தன்று இளம் பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மகளிர் ஆணைய தலைவர் கிரிஜா வியாஸ் இந்த சம்பவத்தை கண்டித்துள்ளதோடு, குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றார். டில்லி முதல்வர் ஷீலா தீட்சித், மார்க்சிஸ்ட் கம்யூ., பொலிட் பீரோ உறுப்பினர் பிருந்தா கராத் ஆகியோரும் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...