|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

31 May, 2011

தெகல்காவுக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ்

தன்னைப் பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதாக தெகல்கா வார இதழுக்கு மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

2006ம் ஆண்டில் இவர் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது சில தொலைபேசி நிறுவனங்களுக்கு சாதகமாக நடந்து கொண்டதாக தெகல்கா செய்தி வெளியிட்டிருந்தது. இந்தச் செய்தியை திட்டவட்டமாக மறுத்துள்ள மாறன், புலனாய்வு செய்தி என்ற பெயரில் தெகல்கா பொய்ச் செய்தி வெளியிட்டுள்ளதாக கூறியுள்ளார். அப்பட்டமான பொய் தகவல்களைக் கொண்டு ஒரு செய்தியைப் போட்டு தனது பெயரைக் கெடுக்க முயற்சி நடந்துள்ளதாக அவர் தனது நோட்டீசி்ல் குற்றம் சாட்டியுள்ளார்.

தங்கள் கைக்கு இன்னும் அந்த நோட்டீஸ் கிடைக்கவில்லை என்று தெகல்கா கூறியுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...