|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

07 June, 2011

அன்னா ஹசாரே உண்ணாவிரதம் ராஜ்காட்டிற்கு மாற்றம்

Thousands of Baba Ramdev`s followers plan to join Anna Hazare`s fast on directions of the yoga guru who said he is "sending his supporters" to Rajghat to protest Sunday`s police crackdown at Ramlila ground.

"The government is trying to curb peaceful protesters. But thousands of my followers will participate in Hazare`s fast tomorrow," Ramdev said, adding that he had spoken to Anna who has promised unstinted support. " Anna Hazare and I are together in the war on corruption," Ramdev said.

It also turned out that his aide Acharya Balkrishan wasn`t missing. Addressing the media here, Balkrishan said, "After the police crackdown, I remained in Delhi in disguise, helping out the people who were injured on Sunday."

Ramdev, whose fast entered the third day on Tuesday, hit out at the government`s decision to bar Hazare from Jantar Mantar. He said he forgave the Prime Minister for the crackdown on his agitation, "but history will not forgive him for the political sin he committed." 




ராம்லீலா மைதானத்தில் நடந்த போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு காரணமான, மத்திய அரசை கண்டித்து, மகாத்மா காந்தியின் சமாதி அமைந்துள்ள ராஜ்காட்டில், காந்தியவாதி அன்னா ஹசாரே இன்று உண்ணாவிரதம் நடத்துகிறார். மேலும், "லோக்பால் வரைவுச் சட்டத்தை உருவாக்க மத்திய அரசு அமைத்த கமிட்டியில் இருந்து அன்னா ஹசாரே தலைமையிலான குழு விலகாது. விலகும் எண்ணம் எப்போதும் இருந்ததில்லை' என்றும், அக்குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 4ம் தேதி ராம்லீலா மைதானத்தில், யோகா குரு பாபா ராம்தேவ் தலைமையில் நடந்த உண்ணாவிரதப் போரட்டத்தில் பங்கேற்ற பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள் மீது டில்லி போலீசார் நள்ளிரவு நேரத்தில் தாக்குதல் நடத்தினர். இதை கண்டித்து, டில்லியின் முக்கிய பகுதியான ஜந்தர் மந்தரில், இன்று உண்ணாவிரதம் நடத்த அன்னா ஹசாரே குழுவினர் முடிவு செய்திருந்தனர். டில்லி முழுவதும் 144 தடை உத்தரவு ஜூன் 16ம் தேதி வரை அமலில் இருப்பதால், இந்த உண்ணாவிரதத்திற்கு டில்லி போலீசார் தடைவிதித்தனர்.
தடையை மீறி, "போராட்டம் நடத்தி கைதாவோம்' என, குழுவின் உறுப்பினர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார். "இது போன்ற தடை உத்தரவு, அமைதியான முறையில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த, அரசியல் சட்டம் கொடுத்த உரிமையை பறிக்கும் செயலாகும்' எனவும் அவர், அரசை சாடினார். இவ்வாறு அறிவித்த சிறிது நேரத்திற்குள், ஹசாரே குழுவினர் மகாராஷ்டிரா சதனில், கூட்டம் நடத்தி டில்லி போலீசின் நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினர்.

"தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தி, கைது செய்யப்படும் போது, வன்முறை சம்பவங்கள் நிகழலாம். அது அரசிற்கு ஆதாயம் தேடித் தரும் என கருதுவதால், உண்ணாவிரதத்தை ராஜ்காட்டிற்கு மாற்றுவதாக' குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்."மத்திய அரசால் அமைக்கப்பட்ட லோக்பால் கமிட்டி கூட்டத்திற்கு அன்னா ஹசாரே குழுவினர் வந்தாலும், வராவிட்டாலும், கமிட்டி தன் கடமையை நிறைவேற்றும்' என, மத்திய அமைச்சர் கபில் சிபல் நேற்று முன்தினம் தெரிவித்தார்.பாபா ராம்தேவ் உண்ணாவிரதத்தை கலைக்க போலீசார் மேற்கொண்ட செயலுக்கு எதிர்ப்பாக லோக்பால் வரைவு மசோதா குறித்த பேச்சை அன்னா ஹசாரே தலைமையிலான குழு அன்று ஒரு நாள் மட்டும் புறக்கணித்தது. ஆனால், அதை அரசு வேறுவிதமாக கருதி, இந்த மசோதாவை திட்டமிட்டபடி உருவாக்குவதாகக் கூறி, ஹசாரே அணுகுமுறையை மத்திய அமைச்சர் கபில் சிபல் தன் பேட்டியில் வெளியிட்டார்.

அமைச்சர் கபில் சிபல் கருத்தை குழு உறுப்பினர் கெஜ்ரிவால் வன்மையாக கண்டித்தார். "ராம்லீலா மைதானத்தில் நடந்த, போலீஸ் அட்டூழியங்களை கண்டித்து, லோக்பால் கமிட்டி கூட்டத்தில் இருந்து, ஒரு நாள் வெளிநடப்பு செய்தோம். அடுத்தடுத்து நடைபெறும் கூட்டங்களில் பங்கேற்போம் என, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் கடிதம் மூலம், ஏற்கனவே தெரிவித்துள்ளோம். இவ்வாறு இருக்க, கபில் சிபலின் கருத்துகள், தேவையற்ற பிரச்னைகளை கிளப்பும் முயற்சி' என, கெஜ்ரிவால் தெரிவித்தார்.அதேசமயம் டில்லி ஜந்தர் மந்தரில் திட்டமிட்டபடி உண்ணாவிரதம் நடத்துவதை குறிப்பிட்டு ஹசாரே சார்பில், பிரபல வக்கீல் சாந்தி பூஷன் டில்லி போலீஸ் கமிஷனருக்கு முன்னதாக ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர், "பெரியளவில் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீறப்படாத சம்பவம் நடக்காதவரையில், டில்லியின் மத்திய பகுதியில், 144 தடை உத்தரவு ஏன். ஆகவே, திட்டமிட்டபடி உண்ணாவிரதம் நடக்கும்' என்று குறிப்பிட்டிருந்தார்.மேலும், லோக் ஆயுக்தா தலைமை பொறுப்பில் இருக்கும் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே அன்னா ஹசாரே குழுவில் இடம் பெற்றவர். முக்கிய பொறுப்பில் இருப்பதால் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்க முடியாது என்று குறிப்பிட்டார். அதே சமயம் "பாபா ராம்தேவ் உண்ணாவிரத பந்தலில் போலீசார் நடத்திய தாக்குதலில் இருந்து அரசு அவரை கண்டு மிரண்டிருப்பது தெரிகிறது' என்று கூறியுள்ளார்.இன்று காந்தி சமாதி முன் அன்னா ஹசாரே தலைமையில் நடைபெறும் உண்ணாவிரதத்திற்கு தன் ஆதரவாளர்கள் அதிகளவில் பங்கேற்பர் என பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.

Warning the UPA government that the joint battle against corruption would intensify, the yoga guru said: "We will first fight through `tapa` (satyagraha). If the government does not accept our common demands, we will not hesitate to fight it through struggle."

But with no clear idea about who was exempt from the mutinous hunger strike, Bhavana Goswami, RSS prabhari from Amareli district in Gujarat, stared at the glass of mango shake and dahi bhalla at the Patanjali Ashram cafeteria in confusion. Ramdev had declared on Tuesday morning`s satsang that his followers are free to break their fast saying foot soldiers need to stay strong. "May be I should just have fruit and milk," she said, settling on the shake.

All of Monday when they landed in Haridwar after being herded out of Ramlila Maidan in Delhi, Bhavana Goswami and 100 fellow agitators from Gujarat, fasted with Ramdev.

  

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...