|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

11 August, 2011

தாய் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை 1 1/2 மாதத்தில் கண்டுபிடிக்கலாம் ஆய்வில்!



தாய் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை கண்டுபிடிக்க அலட்ரா சவுண்ட் ஸ்கேன் கருவி பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் கருவுற்று 4 1/2 மாதத்துக்கு பிறகே ஆணா, பெண்ணா என்பதை கண்டுபிடிக்க முடியும். ஆனால் இப்போது புதிய முறையை பயன்படுத்தி கருவுற்ற 1 1/2  மாதத்திலேயே குழந்தையின் பாலினத்தை கண்டுபிடித்து விடலாம் என்று அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தாயின் ரத்த மாதிரியை எடுத்து அதில் உள்ள மரபணு மூலம் (டி.என்.ஏ.) 1 1/2 மாதத்தில் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை தெரிந்து கொள்ளலாம் என்று அவர்கள் கூறுகின்றனர். இதுதொடர்பாக அவர்கள் 57 விதமான ஆய்வுகளை நடத்தியுள்ளனர். 6500 கருவுற்ற பெண்களை இதற்காக அவர்கள் பயன்படுத்தி உள்ளனர். இதில் 1 1/2 மாதத்திலேயே 99 சதவீதம் சரியாக குழந்தைகளின் பாலினத்தை கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
இதன் மூலம் ஆரம்பத்திலேயே குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டு பிடித்து தாய்க்கு தேவையான சிகிச்சைகளை அளிக்க முடியும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...