|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

01 August, 2011

விகிதாசாரப்படி உணவருந்தாவிட்டால் 4,448 வகையான நோய்கள் வரும்!

விகிதாசாரப்படி உணவு அருந்தாவிட்டால் 4,448 வகையான நோய்கள் வர வாய்ப்பு உள்ளது என்றார் சித்தவைத்திய மகாசங்க மாநிலத் தலைவர் கே.பி. அருச்சுனன். வேலூர் கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் "உணவே மருந்து- மருந்தே உணவு' எனும் தலைப்பில், அவர் பேசியது:  விகிதாசாரப்படி உணவு அருந்தாவிட்டால் 4,448 வகையான நோய்கள் வர வாய்ப்பு உள்ளதாக சித்தமருத்துவத்தில் வரையறை செய்யப்பட்டுள்ளது. புது நோய்கள் வரக் காரணமே உணவுமுறைதான்.

 கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் 45 வயதுக்குப் பின் இரு பாலருக்கும் 7 சதவீதம் மட்டுமே இதயநோய் இருந்தது. ஆனால் 2005-2006 ஆய்வில் 7முதல் 15 வயதுக்குள்பட்ட 20 சதவீதம் பேருக்கு இதயம் தொடர்பான நோய்கள் இருப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.  இதய நோயை சித்தமருத்துவப்படி ஒற்றை செம்பருத்தி பூ மூலம் குணப்படுத்த முடியும். இந்நோயால் குறைவாகப் பாதிக்கப்பட்டவர்கள் ஒருசில வாரங்களிலும், அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் 3 மாதங்களிலும் ஒற்றை செம்பருத்தி மலர் மூலம் குணமடையலாம் என்றார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...