|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

01 August, 2011

அமெரிக்க வெளியுறவுத் துறையின் தெற்கு, மத்திய ஆசியாவின் மூத்த ஆலோசகராக இந்தியர் நியமனம்!

அமெரிக்க வெளியுறவுத் துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான மூத்த ஆலோசகராக அமெரிக்கா வாழ் இந்தியரான மிதுல் தேசாய் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்கா வாழ் இந்தியர் மிதுல் தேசாய். சர்வதேச நிதி சட்ட நிபுணர். அவர் அமெரிக்க வெளியுறவுத் துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான மூத்த ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை அமெரிக்க வெளியுறவுத் துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான துணை அமைச்சர் ராபர்ட் பிளேக் தெரிவித்தார்.

நான் அமெரிக்கா மற்றும் இந்தியாவில் செய்த சேவையைப் பார்த்துவிட்டு தான் பிளேக் எனக்கு இந்த உயரிய பதவியை அளித்துள்ளார் என்று மிதுல் தேசாய் தெரிவித்தார். தேசாயின் பெற்றோர் இந்திரஜித் மற்றும் சுரேகா தேசாய் 1960களில் அமெரி்க்காவில் குடியேறினர். மிதுல் தேசாய் ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் தத்துவம் மற்றும் வேதியியலில் பி.ஏ. பட்டம் பெற்றார். பின்னர் பாஸ்டன் சட்டப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று சட்ட நிபுணரானார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...