|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

01 August, 2011

லோக்பாலில் பிரதமரைச் சேர்க்க பெரும்பான்மை மக்கள் விருப்பம் அண்ணா ஹசாரே!

நாடாளுமன்றத்தில் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அதற்கு இன்னும் ஒரு தினம் இருக்கும் சூழ்நிலையில், இன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய அண்ணா ஹசாரே குழுவினர், லோக்பால் வரம்புக்குள் பிரதமரைச் சேர்க்கும் எங்கள் லோக்பால் மசோதாவையே பெரும்பான்மை மக்கள் ஆதரிக்கின்றனர். அமைச்சர் கபில் சிபல் தலைமையில் தயாரித்திருக்கும் லோக்பால் மசோதாவை நாங்கள் வைத்திருக்கிறோம். ஆனால், 85 சத மக்கள் நாங்கள் பரிந்துரைத்த லோக்பால் மசோதாவை ஆதரிக்கிறார்கள் என்றார்.

கபில் சிபல், அரசாங்கத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டிருக்கும் லோக்பால் மசோதா வரைவுக் கமிட்டியின் 5 நபர் குழுவில் ஒருவாராக இருக்கிறார்.
நாடாளுமன்றத்தில் நாளை அரசின் சார்பில் தயாரிக்கப்பட்டிருக்கும் லோக்பால் மசோதா தாக்கலாகும் என்றுதெரிகிறது. இந்நிலையில், இன்று செய்தியாளர்கள் கூட்டத்தில், அரசு தங்கள் தரப்பு பரிந்துரைகளைக் கண்டுகொள்ளவில்லை என்ற ஆதங்கத்தை அண்ணா ஹஸாரேவின் சமூக சேவகர் குழுவினர் வெளிப்படுத்தினர். தாங்கள் தயாரித்து வைத்திருக்கும் லோக்பால் வரைவினை உதாசீனப்படுத்தியது குறித்து கவலை தெரிவித்த அவர்கள், பிரதமர் மற்றும் நீதித்துறையைச் சேர்ந்தவர்களையும் லோக்பால் வரம்புக்குள் கொண்டுவரவேண்டும் எனவும் உறுதிபடத் தெரிவித்தனர்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...