|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

17 September, 2011

குறைந்து வரும் மழை!


இந்தியாவில் மழைப்பொழிவு கணிசமாக குறைந்து வருகிறது,'' என, பன்னாட்டு நீர் மேலாண்மை நிறுவன இயக்குனர் பழனிச்சாமி தெரிவித்தார். மதுரையில் அவர் கூறியதாவது: பருவநிலை மாற்றத்தால் பயிர் விளைச்சல் 10 விழுக்காடு குறைந்துள் ளது. மழைப்பொழிவு, 30 நாளிலிருந்து 20 நாளாக குறைந்து விட்டது. வெள்ள பெருக்கு இனி அடிக்கடி நிகழும். வெள்ளத்தை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, நீரை சேமிக்கவும் தொழில் நுட்பம் அவசியம். தமிழகத்தில் நீர்நிலைகளின் ஆதாரங்கள் பற்றாக்குறையாக உள்ளன. அதை சரிசெய்யும் உயர்தொழில்நுட்பம் நம்மிடம் இருந்தும், அதை மக்களிடம் கொண்டு செல்ல முடியவில்லை. திறமையாக பயன்படுத்தும் பயிற்சி இல்லாதது இதற்கு 
காரணம். நீரியல் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் பயிற்சி நிறுவனங்கள் உருவாக வேண்டும். சொட்டுநீர் பாசனம் கட்டாயம் என்ற அடிப்படையில், கிணறு, குழாய் பாசனத்திற்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...