|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

21 September, 2011

தயாநிதி மாறன் மீது விரைவில் எப்.ஐ.ஆர் தாக்கல் சிபிஐ!

ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சரான தயாநிதி மாறன் மீது சிபிஐ விரைவில் முதல் தகவல் அறிக்கையை (FIR) தாக்கல் செய்யும் என்று தெரிகிறது. அடுத்த மாத துவக்கத்தில் இந்த எப்ஐஆர் தாக்கலாகலாம் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏர்செல் நிறுவனத்துக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கும் விவகாரத்தில் அதன் முந்தைய உரிமையாளர் சிவசங்கரனை மிரட்டியதாகவும், ஏர்செல் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்குமாறு அவரை நிர்பந்தித்ததாகவும், அவர் அதை மேக்சிஸ் விற்ற பின் ஏர்செல்லுக்கு ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்கியதாகவும் தயாநிதி மீது புகார் உள்ளது. ஸ்பெக்ட்ரம் கிடைத்த பிறகு மேக்சிஸ் நிறுவனம் சன் டிவியின் டிடிஎச் திட்டத்தில் பல நூறு கோடிகளை முதலீடு செய்தது. இது தொடர்பாக சிவசங்கரன், தயாநிதி மாறன், சன் டிவி அதிபர் கலாநிதி மாறன் ஆகியோரிடம் சிபிஐ ஏற்கனவே விசாரணை நடத்தியுள்ளது.

ஷோரி மீதான புகார்களுக்கு ஆதாரமில்லை...: அதே நேரத்தில் பாஜக ஆட்சியில் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த அருண் ஷோரி மீது ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கூறப்படும் புகார்களுக்கு ஆதாரமில்லை என்று சிபிஐ கூறுகிறது. ஆனால், அவருக்கு முன் அமைச்சராக இருந்த மறைந்த பிரமோத் மகாஜனின் பங்கு குறித்து சிபிஐ தொடர்ந்து விசாரித்து வருகிறது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...