|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

21 October, 2011

உணவுப் பொருள் பணவீக்கம் 10 சதவீதத்தை தாண்டியது!

நாட்டின் உணவுப் பொருள் பணவீக்கம், அக்., 8ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில்,10.60 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, இதற்கு முந்தைய வாரத்தில்,9.32 சதவீதம் என்ற அளவில் இருந்தது.கணக்கீடு செய்வதற்கு எடுத் துக் கொள்ளப்பட்ட வாரத்தில், பல்வேறு உணவுப் பொருட்களின் விலை அதிகரித்திருந்தது. காய்கறிகள் விலை 17. 59 சதவீதம் உயர்ந்திருந்தது. மேலும், பழங்கள் (17.59 சதவீதம்), பால் (10.35 சதவீதம்), முட்டை, இறைச்சி, மீன் (14.10 சதவீதம்) போன்றவற்றின் விலையும் அதிகரித்து காணப்பட்டது. பருப்பு வகைகள்7.42சதவீதம் என்றளவிலும்,தானியங்கள் 5.41 சதவீதம் என்றளவிலும் உயர்ந்திருந்தது. இருந்த போதி லும்,வெங்காயத்தின் விலை 11.27 சதவீதம் என்றளவிலும், கோதுமையின் விலை 0.18 சதவீதம் என்றளவிலும் குறைந் திருந்தது.மொத்த விலைக் குறியீட்டு எண்ணில், முக்கியபொருட்களின் பங்களிப்பு20 சதவீதத்திற்கும் அதிகமாக உள் ளது. கணக்கீட்டு வாரத்தில், முக்கிய பொருட்களின் விலை, 11.18 சதவீதம் என்றளவில் உயர்ந்திருந்தது. இது, முந்தைய வாரத்தில் 10.60 சதவீதமாக இருந்தது. நூலிழை, எண்ணெய்வித்துக்கள், தாதுப்பொருட்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய, உணவு சாராத பொருட்களின் விலை 8.51 சதவீதமாகக் குறைந்திருந்தது.இது,இதற்கு முந்தைய வாரத்தில், 9.59 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து காணப் பட்டது.கணக்கீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வாரத்தில், எரிபொருள் மற்றும் மின்சாரம் ஆகியவற்றின் விலை 15.17 சதவீதம் என்ற அளவில் அதிகரித்துள்ளது. இது, முந்தைய வாரத்தில் 15.10 சதவீதமாக இருந்தது. உணவுப் பொருள் பணவீக்கம், சென்ற ஆக., 20ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இரட்டை இலக்கத்தை எட்டியது. இதைத் தொடர்ந்து குறைந்து வந்த உணவுப் பொருள் பணவீக்கம், மதிப்பீட்டு வாரத்தில் மீண்டும் இரட்டை இலக்கத்தை எட்டியுள்ளது.நாட்டின் மொத்த பணவீக்கம் உயர்வதற்கு, சர்வதேச அளவில் விளை பொருட்களின் விலை அதிகரிப்பு தான் காரணம் என்று, அண்மையில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...