|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

21 October, 2011

நாட்டில் கச்சா எண்ணெய் உற்பத்தி 3.82 கோடி டன்னாக உயரும் !

நடப்பு நிதியாண்டில், நாட்டின் கச்சா எண்ணெய் உற்பத்தி 3.82 கோடி டன்னாக உயரும் என, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி தெரிவித்தார்.நாட்டின் பார்மர், ராஜஸ்தான் மற்றும் கிருஷ்ணா கோதாவரி படுகையில் உற்பத்தி அதிகரிப்பால், சென்ற 2010-11 ம் நிதியாண்டில் கச்சா எண்ணெய் உற்பத்தி 3.77 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில் (2009-10) 3.35 கோடி டன்னாக இருந்தது. டில்லியில், பொருளாதார பத்திரிகை ஆசிரியர்கள் கூட்டத்தில் அமைச்சர் மேலும் கூறியதாவது:நாட்டின் மொத்த கச்சா எண்ணெய் உற்பத்தியில் மேற்கண்ட மூன்று கிடங்குகளின் பங்களிப்பு 60 லட்சம் டன்னாகும். சென்ற நிதியாண்டில், உள்நாட்டில் 5,222 கோடி கி.மீட்டர் எரிவாயு உற்பத்தியாகி யுள்ளது. தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுமாக எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்திக்காக, பல்வேறு தரப்பட்ட பணிகளை மேற் கொண்டு வருகின்றன. உள்நாட்டில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் துரப்பண பணிகளுக்காக அங்குள்ள எண்ணெய் வயல்களை வாங்கும் நடவடிக்கைகளில் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இவ்வகையில் ஓ.என்.ஜி. விகேஷ் (ஓ.வி.எல்.), ஆயில் இந்தியா, இந்தியன் ஆயில், பீ.பி.சி.எல்.,எச்.பி.சி.எஸ். மற்றும் மேற்கத்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் எண்ணெய் வயல்களை கையகப்படுத்தி வருகின்றன. உற்பத்தி பகிர்மான அடிப்படையில் மத்திய அரசு, உள்நாட்டில் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்திக்காக, 1,588 கோடி டாலர் முதலீடு மேற் கொள்ளும் வகையில், 235 இடங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு பணிகளுக்காக உள்நாடு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இவை தவிர கூடுதலாக, 33 ஒப்பந்தங்களும் கையொப்பம் ஆகி உள்ளது. இந்தியாவில் கச்சா எண்ணெய் மற்றும் அதற்கு இணையான அளவில், இந்தியாவில், 204 கோடி டன் அளவிற்கு கச்சா எண்ணெய் மற்றும் அதற்கு இணையான அளவில்,எரிவாயு வளம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் டீசல்,மண் ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றை அடக்க விலைக்கு குறைவாக விற்பனை செய்கின்றன.இத னால், இந்நிறுவனங்களுக்கு நடப்பு நிதியாண்டிற்கு, 1 லட்சத்து 21 ஆயிரத்து 571 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மாநில வரிகள் நீங்கலாக, கடந்த ஜூன் மாதம் 25ம் தேதி ஒரு லிட்டர் டீசல் விலையில் 3 ரூபாயும் பொது வினியோகதிட்டத்தின் கீழ் வழங்கப் படும் மண்ணெண்ணெய் விலையில் 2 ரூபாயும்,சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு, 50 ரூபாயும் உயர்த்தப்பட்டது. இந்நிலையிலும் எண்ணெய் நிறுவனங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்தியா வாங்கும் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை சராசரியாக,110டாலர் என்ற அளவில் உள்ளது. இந்நிலையில், சில மாதங்களாக ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கும் கீழ் உள்ளது. ஆனால், ரூபாய்க்கு எதிரான டாலரின் வெளிமதிப்பு உயர்ந்ததால், இறக்குமதி செலவினம் அதிகரித்துள்ளது.டீசல் விலை மீதான கட்டுப் பாட்டைநீக்க அரசுக்கு எண்ணம் இல்லை. அதே போன்று டீசல் விலை மீது இரட்டை விலை கொள்கை திட்டமும் கொண்டு வரப்பட மாட்டாது. இரட்டை விலைக் கொள்கை திட்டத்தை அமல்படுத்துவது இயலாத காரியம்.அவ்வாறு அமல்படுத்தினாலும்,அது நாட்டில் பல்வேறு பிரச்னை களுக்கு வழிவகுத்துவிடும்.தற்போது விவ சாயம்,ரயில்வே, சாலை போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசியதுறைகளில் டீசல் அதிகளவில் பயன் படுத்தப்படு கிறது.எனவே, இதன் விலையை உயர்த்தினால் அது நாட்டின் வளர்ச்சியை வெகுவாக பாதிக்கும் என்பதுடன் பல்வேறு இடர் பாடுகளையும் விளைவிக்கும்.இவ்வாறு அமைச்சர் ஜெய்பால் ரெட்டி

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...