|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

17 October, 2011

உடல் உஷ்ணம் தணிக்கும் கொட்டிக்கிழங்கு!


குளிர்ச்சித் தன்மை கொண்ட கொட்டிக்கிழங்கு செடி இனத்தைச் சேர்ந்தது. இது தன்னிச்சையாக நீர் நிலைகளிலும், நீரோடைகளிலும், வளர்ந்திருக்கும். இக்கிழங்கில் மூன்று வகைகள் உள்ளன. அவை, கொட்டி, கருங்கொட்டி, காறற் என்பதாகும். இதில் கருங்கொட்டியானது பேய்க்கொட்டி என்றும் அழைக்கப்படுகிறது இது மருத்துவத்திற்கு பயன்படாது பிற கொட்டிக் கிழங்குகள் மருத்துவத்திற்குப் பயன்படும். இக்கிழங்குக்கு உடல் உஷ்ணத்தை தணிக்கும் ஆற்றல் உண்டு. இதனை துண்டுகளாக்கி வெயிலில் உலர்த்தி, இடித்து சூரணமாக்கி பசும் பாலில் கலந்து காய்ச்சி சாப்பிடலாம். இதனால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் போக்கு குணமாகும்.

கரப்பான் நோய் போக்கும்: கொட்டிக்கிழங்கு இனிப்புச் சுவையுடன் இருக்கும். அதனால் இக்கிழங்கை சமைத்துச் சாப்பிட சுவையுடன் இருக்கும். இதனை பொரியலும் செய்யலாம். இக்கிழங்கை மாவாக்கிக் கஞ்சியாகக் கரைத்து கிராமத்து மக்கள் சாப்பிடுவதுண்டு. குழந்தைகளுக்கு ஏற்படும் கரப்பான் நோயும் சரியாகும். கொட்டிக்கிழங்கு தூளை தேங்காய்ப் பாலில் கலந்து கரப்பான், தேமல், படைகளுக்கு மேல்பூச்சாக போட சீக்கிரம் ஆறிவிடும்.பல்நோய் நீக்கும் பிரப்பங்கிழங்கு: பிரப்பங்கிழங்கு என்று ஒருவகை கிழங்கு உள்ளது. இது செடியினத்தைச் சேர்ந்தது. இக்கிழங்கு மருத்துவத்தில் முக்கிய இடம் பெற்றுள்ளது. இக்கிழங்கின் குணம் பற்களில் ஏற்படும் அனைத்து நோய்களையும் நீக்க வல்லது. இக்கிழங்கை காயவைத்து இடித்துத் தூளாக்கி நீரில் கலந்து காய்ச்சி அந்நீரைக் கொண்டு வாய் கொப்பளித்து வரலாம். இதனால் பற்களில் ஏற்படும் நோய்கள் நீங்கும். இத்தூளை பற்பொடியுடன் சேர்த்து பற்கள் துலக்கி வரலாம். மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கும் பற்பொடிகளில் இதுவும் இடம்பெற்றிருக்கும்.இக்கிழங்கின் தூளை ஒரு நாளைக்கு இரண்டு வேளை வெந்நீரில் கலக்கி உட்கொள்ளலாம். இதனால் கீழ்வாதம், முடக்குவாதம், போன்ற வாதம் தொடர்புடைய நோய்கள் குணமடையும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...