குளிர்ச்சித் தன்மை கொண்ட கொட்டிக்கிழங்கு செடி இனத்தைச் சேர்ந்தது. இது தன்னிச்சையாக நீர் நிலைகளிலும், நீரோடைகளிலும், வளர்ந்திருக்கும். இக்கிழங்கில் மூன்று வகைகள் உள்ளன. அவை, கொட்டி, கருங்கொட்டி, காறற் என்பதாகும். இதில் கருங்கொட்டியானது பேய்க்கொட்டி என்றும் அழைக்கப்படுகிறது இது மருத்துவத்திற்கு பயன்படாது பிற கொட்டிக் கிழங்குகள் மருத்துவத்திற்குப் பயன்படும். இக்கிழங்குக்கு உடல் உஷ்ணத்தை தணிக்கும் ஆற்றல் உண்டு. இதனை துண்டுகளாக்கி வெயிலில் உலர்த்தி, இடித்து சூரணமாக்கி பசும் பாலில் கலந்து காய்ச்சி சாப்பிடலாம். இதனால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் போக்கு குணமாகும்.
ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
17 October, 2011
உடல் உஷ்ணம் தணிக்கும் கொட்டிக்கிழங்கு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment