|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

04 October, 2011

அரவான் பாடல்களை வெளியிடும் ஏஆர் ரஹ்மான்!


இந்த ஆண்டு நல்ல சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்த படங்கள் இரண்டு. ஒன்று சற்குணம் இயக்கி வெளியாகியுள்ள வாகை சூட வா. அடுத்தது வசந்த பாலன் இயக்கத்தில் வரவிருக்கும் அரவாண். இரண்டுமே பீரியட் பிலிம்ஸ் என்ற வகையைச் சேர்ந்த வரலாற்றுப் படங்கள். இவற்றில் வாகை சூட வா வெளியாகி, பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. நாளுக்கு நாள் ரசிகர் கூட்டமும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. அடுத்து அரவாண் முறை. அரவாண் படம் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்குத் தயாராகி வருகிறது. அதன் முதல் படியாக, நாளை புதன்கிழமை மாலை இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடக்கிறது.

அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரித்துள்ள இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் பாடகர் கார்த்திக். ஏ ஆர் ரஹ்மானால் அறிமுகப்படுத்தப்பட்டு, அனைத்து முன்னணி இசையமைப்பாளர்களின் செல்லப் பிள்ளையாக பின்னர் மாறியவர் கார்த்திக். இசையமைப்பாளராக அறிமுகமாக இதைவிட ஒரு சிறந்த வாய்ப்பு அவருக்கு வாய்த்திருக்காது எனலாம்.

பாடல்களை வெளியிடப் போகிறவர் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான். பெற்றுக் கொள்பவர் மணிரத்னம். இந்த மேடையிலேயே, தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்காக இயக்குநர் சிகரத்துக்கு ஒரு பாராட்டு விழாவையும் எடுக்க இயக்குநர் வசந்த பாலன் திட்டமிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பும் உரிமை ஜெயா தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது!

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...