|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

05 October, 2011

ஆஸ்பிரின் சாப்பிட்டால் பார்வை பறிபோகும்!


வலி நிவாரணியாக உட்கொள்ளப்படும் ஆஸ்பிரின் மாத்திரைகளால் கண்பார்வையை பாதிக்கும் ஆபத்து உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. தினசரி ஒருமுறை அல்லது இரண்டுமுறை ஆஸ்பிரின் மாத்திரை உட்கொள்பவர்களுக்கு பிற்காலத்தில் கண்பார்வை பாதிக்கும் ஆபத்து அதிகம் உள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

ஐரோப்பாவில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட வயதானவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி தினசரி இரண்டு வேளை ஆஸ்ப்ரின் மாத்திரை எடுத்துக்கொண்டவர்கள் கண்பார்வை தொடர்பான நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக டெலிகிராப் பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது.

வலிநிவாரணி மாத்திரைகள்: கண் வலி ஏற்படுவது இல்லையென்றாலும்,படிப்பது, டிரைவ் செய்வது, தொலைக்காட்சி பார்ப்பதற்கு மிகவும் சிரமம் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். பல்வேறு நோய்களுக்காக வலி நிவாரணியாக உட்கொள்ளப்படும் ஆஸ்பிரின் மாத்திரைதான் காரணம் என்று தெரியவந்துள்ளது.நெதர்லாந்தில் உள்ள நியூரோசயின்ஸ் அக்கடமிக் மெடிக்கல் சென்டரில் பணிபுரியும் பால்ஸ் டி ஜாங் என்பவர் தனது குழுவினருடன் மேற்கொண்ட ஆராய்ச்சியில் இதயநோய் பாதிப்புகளுக்காக ஏராளமானோர் ஆஸ்பிரின் மாத்திரை உட்கொள்வதாக தெரிவித்துள்ளார். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஆஸ்ப்ரின் மாத்திரைகள் மூலம் விழித்திரைகள் பாதிக்கப்பட்டு பார்வை பறிபோவதாகவும் ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளார்.கேன்சர் குணமாகும் : இருப்பினும் தினமும் குறைந்த அளவான 75 மில்லி கிராம் அளவு ஆஸ்பரின் மாத்திரை சாப்பிட்டு வந்தால் கோலான் எனப்படும் குடல் புற்றுநோய் குணமடைவதாக ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக லான்செட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் ஆண்டு தோறும் கோலோன் கேன்சர் நோயால் 6லட்சத்து 55 ஆயிரம் பேர் இறக்கின்றனர்.ஆஸ்பரின் மாத்திரை புற்று நோயை கட்டுப்படுத்துவதாக ஆக்ஸ்போர்டு பல்கலை கழக் பேராசிரியர் டாக்டர் பீட்டர் ரோத்வெல் கூறுகிறார். கடந்த 20 ஆண்டு கால ஆராய்ச்சியில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேன்சரால் பாதிக் கப்பட்ட 8 ஆயிரத்து 282 பேருக்கு இந்த மாத்திரையை பயன்படுத்த அறிவுரை கூறியதில் 119 பேர் மட்டு மே இறப்பை தழுவியுள்ளனர். வரும் காலத்தில் இந்த மாத்திரை மற்ற கேன்சர் நோய்களுக்கு ஒரு வரப் பிரசாதமாக அமையும் என்று உறுதியாக கூற முடியும் என தெரியவந்துள்ளதாக பேராசிரியர் ரோத்வெல் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...