|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

05 October, 2011

காதலனை பார்க்க துறவி வேடம் போலி விசா பெற்ற பெண் கைது!


அமெரிக்காவில் உள்ள காதலனை பார்க்க விரும்பிய, நேபாளத்தைச் சேர்ந்த இளம்பெண் புத்து துறவி வேஷத்தில் போலி பாஸ்போர்ட் பெற்று கைதானார். பெங்களூரில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் வேலை செய்பவர் சாம்சோ டோல்மா (25). இவர் அமெரிக்க செல்ல விசா கேட்டு, சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நடந்த நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது அவரது ஆவணங்களை பரிசோதித்த அதிகாரி, அவர் 2 பாஸ்போர்ட்களை பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது.

பிறந்த தேதி, போட்டோ, பெயர் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் போலியாக சமர்ப்பித்து, கடந்த 2005ம் ஆண்டு கொல்கத்தாவில் புத்த துறவியை போல வேஷமிட்டு முதல் பாஸ்போர்ட்டை பெற்றுள்ளார்.

அதன்பின் 2010ம் ஆண்டு டெல்லியில் உண்மையான ஆவணங்களை சமர்ப்பித்து பாஸ்போர்ட் பெற்றுள்ளார். போலி ஆவணங்கள் மூலம் வெளிநாடு செல்ல முயன்றதாக, சாம்சோ-வை, ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

போலீசாரின் விசாரணையில் சாம்கோ கூறியதாவது, நேபாள சேர்ந்த நான் குடும்பத்தில் 3வது பெண்பிள்ளை. 10ம் வகுப்பு படிப்பை முடித்து எனது 2 மூத்த சகோதரிகளை போல நானும் புத்த துறவியாக செல்லும்படி குடும்பத்தாரால் நிர்பந்திக்கப்பட்டேன். முதலில் அதற்கு ஒப்பு கொண்ட போதும், தற்போது அமெரிக்காவில் உள்ள ஒருவர் மீது காதல் வயப்பட்டேன்.

இதனால் துறவறத்தில் இருந்து விலகி, கொல்கத்தா வந்தேன். அங்கு பாஸ்போர்ட் ஏஜன்ட் ஒருவரின் ஆலோசனையின் பெயரில் போலி பாஸ்போர்ட் எடுத்து, அமெரிக்க செல்ல முயன்றேன். அதில் தோல்வியடைந்து, பாஸ்போர்ட்டும் தொலைத்துவிட்டேன். பின் 2010ம் ஆண்டு டெல்லி சென்று உண்மையான பெயரில் பாஸ்போர்ட் எடுத்து அமெரிக்க செல்ல தற்போது முயன்ற போது, அதிகாரிகளிடம் சிக்கினேன், என்றார். இதையடுத்து சாம்சோ-வை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...