|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

01 November, 2011

200 எஸ்.எம்.எஸ். வரை அனுப்பலாம்!

ஒரு சிம் கார்டில் இருந்து நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 100 எஸ்.எம்.எஸ்.கள் மட்டுமே அனுப்ப முடியும் என்ற வரம்பை, 200 எஸ்.எம்.எஸ்.களாக உயர்த்தியது டிராய். தொலைத் தொடர்புத்துறை ஒழுங்குமுறை ஆணையமான டிராய், ஒரு சிம் கார்டில் இருந்து 100 நாளொன்றுக்கு எஸ்.எம்.எஸ்.கள் மட்டுமே அனுப்பலாம் என கட்டுப்பாட்டு விதித்திருந்தது. தற்போது, அந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு, அதிகபட்சமாக 200 எஸ்.எம்.எஸ்.கள் வரை அனுப்பலாம் என டிராய் அறிவித்துள்ளது. செல்போன் சேவை நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் இருந்து வந்த கோரிக்கைகளால், எஸ்.எம்.எஸ். வரம்பு மாற்றியமைப்பட்டுள்ளதாக டிராய் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. நாளோன்றுக்கு அதிகபட்சம் 200 எஸ்.எம்.எஸ்.கள் என்ற வரம்பு இன்று முதல் நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...