|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

23 November, 2011

மும்பை விமானநிலையத்திற்கு அச்சுறுத்தல்!


மும்பை ஏர்போர்ட்டுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பது உண்மை தான் என்று ராஜ்யசபாவில் இதனை மத்திய உள்துறை இணை அமைச்சர் முல்லைப்பள்ளி ராமச்சந்திரன் தெரிவித்தார். ராஜ்யசபா ஒத்தி வைக்கப்படும் முன்னதாக மும்பை விமான நிலையம் மீது வான்வழி தாக்குதல் நடத்தும் அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்படுகிறதே உண்மைதானா என்று கேள்வி எழுப்பியபோது இதனை அவர் உறுதி செய்தார். அவர் அளித்த பதிலில் , ஆம் இது போன்ற கடந்த காலங்களில் புலனாய்வு தங்களுக்கு சில கோப்புகளை தெரிவித்துள்ளது. இது உண்மைதான். அவ்வப்போது எங்களுக்கு புலனாய்வு நிறுவனம் தரும் தகவலில் இதுவும் ஒன்றுதான் . இது முக்கிய விஷயமாக அரசு எடுத்து சம்பந்தப்பட்ட பாதுகாப்பு துறையினருடன் பகிரப்பட்டுள்ளது. அத்துடன் ஏர்போர்ட்டுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. என்றார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...