|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

12 January, 2012

நாகை மீனவர்கள் 13 பேர் சிறைபிடிப்பு இலங்கை கடற்படை மீண்டும் மீண்டும் அட்டூழியம்

கண்ணீர் துளியாய் இருக்கும் ஒரு சிறு நாடு! இந்திய அரசாங்கம் இதுவரை தட்டி கேட்காததினால் இன்னும் இன்னும் நம்மை அடிமையாய்   தமிழன் என்றால் இளித்தவாயன், தமிழன் என்றால் தன் மானம் இல்லாதவன், தமிழன் என்றால் அவனுக்கு மானம் ரோசம் எதுவும் இல்லாதவன் என்று நினைத்து கொண்டிருக்கும் மத்திய அரசை எதை கொண்டு நாம் அடிப்பது?     கேரளா காரன் அடிப்பதையே தட்டிகேட்க வக்கில்லாத இந்த காங்கிரஸ் வெளியில் இருந்து ஒரு நாடு அடிப்பதையா கேட்கப்போகுது?  இங்கு ஒரு பிரபாகரன் பிறந்து தனி தமிழ்நாடு கேட்டால் தான் தமிழனுக்கு விடிவு! அதுவரை மலையாளி கிட்ட மட்டும் இல்ல? கர்நாடக காரனும், ஆந்திரா காரணம், சிங்களவனும் நம்மள சுத்தி சுத்தி அடிப்பானுங்க நாமலும் அந்த நாதாரி சரி இலைன்னு இந்த நாதாரிய தேர்ந்தேடுப்போம். இதுவும் எனக்கு என்னனு?       

கவிதையால் புரட்டி போட ஒரு பாரதி வேண்டாம்.
100 இளைஞர் கொடுத்தால் நாட்டை புரட்டி 
போடநினைக்கும் ஒரு விவேகானந்தர் வேண்டாம்.    
மீண்டும் ஒரே ஒரு பிரபாகரனை கொடு எம் தமிழினம் தழைக்க.... 
தன்மானம் காக்க... ஒரு வேலுப்பிள்ளை  போதும்! 

தமிழக மீனவர்களை நடுக்கடலில் தாக்குவதையும், இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்து கொண்டிருக்கும் மீனவர்களை கடத்தி செல்வதையும் இலங்கை கடற்படையினர் வாடிக்கையாக கொண்டுள்ளனர். மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் இந்த தொடர் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியவில்லை. இந்தநிலையில் நாகையை சேர்ந்த 13 மீனவர்கள் கடத்தப்பட்டு உள்ளனர். நாகையை அடுத்த அக்கரைப் பேட்டை மீனவ கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் விஜயகுமார். இவருக்கு சொந்தமான படகில் மகேந்திரன், செந்தில்நாதன், பழனிவேல், அருள், செல்வன், சற்குணன், செல்வநாதன் ஆகிய 7 பேரும், இன்னொரு படகில் 6 பேரும் கடந்த 9-ந்தேதி மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் இந்திய எல்லையில் நடுக்கடலில் வலை வீசி மீன்பிடித்து கொண்டு இருந்தனர். 

அப்போது குட்டி ரோந்து கப்பலில் இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர். 2 படகுகளை சுற்றி வளைத்தனர். பின்னர் இலங்கை கடல் எல்லையில் மீன்பிடித்ததாக கூறி 13 மீனவர்களையும் அவர்கள் சிறைபிடித்து சென்றனர். அதிர்ச்சி அடைந்த மற்ற மீனவர்கள் கரைக்கு திரும்பி இந்த தகவலை ஊருக்குள் தெரிவித்தனர். இந்த தகவல் காட்டு தீ போல பரவியது. இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. மீனவர்களின் குடும்பத்தினர் கதறினர். 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...