|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

14 January, 2012

புயல் பாதித்தவர்களுக்கு நிவாரண உதவி - புதுச்சேரியில் விஜய்!

தானே புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட புதுவை மாநில மக்களுக்கு உதவ இன்று புதுவை வந்தார் நடிகர் விஜய். ஆரம்பத்திலிருந்தே புதுச்சேரி மீது தனி கவனம் செலுத்தி வருபவர் நடிகர் விஜய். தனது மக்கள் இயக்கத்தின் சார்பில் ஏற்கெனவே இங்குதான் முதலில் உதவிகளை வழங்கினார். புதுவை முன்னாள் எம்எல்ஏ புஸ்ஸி ஆனந்த் இவரது ரசிகர் மன்றத் தலைவரும் கூட. எனவே புதுவைக்கு விஜய் தனி முக்கியத்துவம் தந்து வருகிறார்.

தானே புயலால் புதுவை பகுதி முழுவதும் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க நடிகர் விஜய் இன்று(சனிக்கிழமை) புதுவை வந்தார். புதுவை சுப்பையா சாலையில் குபேர் திருமண மண்டபம் அருகே காலை 9 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று உதவிகளை வழங்கினார் விஜய். இதில் விஜய் மன்ற நிர்வாகிகள் தவிர, ஆயிரக்கணக்கான மக்கள் திரளாக வந்து பங்கேற்றனர். விஜய்யைக் காணவும், அவரிடம் உதவி பெறவும் ஆர்வத்துடன் முண்டியடித்தனர் புதுவை மக்கள்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...