|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

15 January, 2012

பொன்னம்பல மேட்டில் தெரிந்த ஜோதி விசாரணை!

சபரிமலையில் மகர ஜோதி தெரியும் இன்றைய தினத்துக்கு ஒரு தினம் முன்னதாக வெளிச்சம் தெரிந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கேரள மாநில தேவசம்போர்டு அமைச்சர் சிவக்குமார் கூறியுள்ளார். சபரிமலையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் உம்மன்சாண்டி அரசால் இயன்ற அளவு பணிகள் சபரிமலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மகரவிளக்கு மண்டல சீசன் எந்தப் பிரச்னையும் இல்லாமல் நிறைவுக் கட்டத்தை அடைந்துள்ளது. முல்லைப் பெரியாறு பிரச்னை காரணமாக தமிழக பக்தர்கள் வருகையில் சற்று குறைவு ஏற்பட்டுள்ளது. பொன்னம்பல மேட்டில் மகரவிளக்கு ஏற்றுவற்கு மலைஅரையன்மார்களுக்கு உரிமை உண்டு என்று கூறி அரசுக்கு வந்த மனு தேவசம் போர்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மலைஅரையன்களுக்கு பொன்னம்பலமேட்டில் உரிமை உண்டு என்று அரசின் முதன்மை கண்ட்ரோலர் கூறிய கருத்து அரசின் கருத்து அல்ல.
மேலும், மகரஜோதிக்கு ஒரு நாள் முன்னதாக பொன்னம்பலமேடு அருகே வெளிச்சம் தென்பட்டது என்று கூறப்படும் புகார் பற்றி உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட செயலை சபரிமலை மீது நம்பிக்கை கொண்ட எவரும் செய்திருக்க மாட்டார்கள்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...