|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

29 February, 2012

24வது நாளாக ‌நீடி‌க்கு‌ம் அரசு சித்த மருத்துவ மாணவர்கள் போரா‌ட்‌‌ட‌ம்!

முதலாமாண்டு வகுப்புகளைத் திறக்ககோரி நெ‌ல்லை மாவ‌ட்‌ட‌ம், பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்க‌ளி‌ன் தொடர் உள்ளிருப்பு போராட்ட‌ம் 24வது நாளை எ‌ட்டியு‌ள்ளது. ஆனா‌ல் மாணவ‌ர்க‌ளி‌ன் போரா‌ட்ட‌த்தை த‌‌‌மிழக அரசு க‌ண்டுகொ‌ள்ளவே இ‌ல்லை.  முதலாமாண்டு வகுப்புகளைத் திறக்கக்கோரி, நெல்லை சித்த மருத்துவக் கல்லூரி மாணவ மாணவியர்கள் மேற்கொண்டு வரும் உள்ளிருப்புப் போராட்டம் நட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர். இ‌ந்த போரா‌ட்‌ட‌ம் இ‌ன்று 24வது நாளை எட்டியுள்ளது.  த‌ங்க‌ளி‌ன் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என சித்த மருத்துவக்கல்லூரி மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.  தங்களுக்கு உரிய நியாயம் கிடைக்கும் வரை போராட்டத்தைக் கை விடப்போவதில்லை என்று மாணவர்கள் கூறியுள்ளன‌ர்.  இதனடையே இந்த பிரச்னை குறித்த வழக்கு செ‌ன்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...