|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 February, 2012

ஒட்டுமொத்த இழப்பு உங்களுக்கே ...

 அரசியல் கட்சிகளே வெற்றி பெறும், ஒட்டுமொத்த இழப்பு உங்களுக்கே என்று பொதுமக்களைப் பார்த்து எச்சரிக்கை செய்தார் அண்ணா ஹசாரே. சனிக்கிழமை உ.பி.மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்ற பொதுமக்கள் விழிப்பு உணர்வு  பொதுக்கூட்டத்தில் பேசிய போது அவர் இவ்வாறு பேசினார்.
இந்த உ.பி. தேர்தலுக்குப் பின் எல்லாம் அடியோடு மாறி விடும் என்றெல்லாம் யாரும் கனவு காண முடியாது. எப்படி இருந்தாலும் இதன் முழு வெளிப்பாடு, பொதுமக்கள் தோற்பதும் அரசியல்வாதிகள் வெற்றி பெறுவதும்தான். ஜன்லோக்பால் என்பதன்மூலம் இப்போது ஒரு போராட்டத்தின் ஆரம்பக் கட்டத்தை எட்டியிருக்கிறோம். இது முழுமை அடையுமானால், இந்தப் போக்கில் ஒரு மாறுதல் வரலாம் என்றார் அண்ணா ஹசாரே.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...