|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

07 March, 2012

2014-15ம் ஆண்டு முதல் புதிய என்ஜீனியரிங் கல்லூரிகளுக்கு அனுமதி கிடையாது!


 வரும் 2014-15 கல்வியாண்டு முதல் புதிதாதக பொறியியல் கல்லூரிகள் துவங்க அனுமதி அளிக்கக் கூடாது என்று அகில இந்திய தொழில்நுட்பக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் அதுவும் குறிப்பாக தென்னிந்தியாவில் பொறியியல் கல்லூரிகள் புற்றீசல் போல பெருகிவிட்டன. தற்போது நாடு முழுவதும் 3,393 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அவற்றில் 15 லட்சம் இடங்கள் உள்ளன. மேலும் 3,900 மேலாண்மையியல் கல்லூரிகள் உள்ளன. அதில் 3.5 லட்சம் இடங்கள் உள்ளன. இதில் 70 சதவீத கல்லூரிகள் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ளன. அதிக அளவில் கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளதால் ஏராளமான இடங்கள் நிறப்பப்படாமலேயே காலியாக உள்ளன. இதனால் இனி புதிதாக கல்லூரிகள் துவங்க அனுமதிக்கக் கூடாது என்று தமிழகம் உள்பட 5 மாநிலங்கள் கோரிக்கை விடுத்தன.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தி முடிவு எடுக்க அகில இந்திய தொழில்நுட்பக் குழு கூட்டம் மும்பையில் நடநத்து. இந்த கூட்டத்தில் புதிதாக பொறியியல் கல்லூரிகள் துவங்க அனுமதி அளிக்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக கல்விக்குழு தலைவர் மந்தா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, பொறியியல் கல்லூரி துவங்குபவர்கள் 2 ஆண்டுகளுக்கு முன்பே கட்டுமானப் பணியை துவங்கி விடுகின்றனர். அதனால் தற்போது கட்டுமானப் பணியைத் துவங்கியுள்ளவர்கள் பாதிக்கப்படாத வகையில் 2014-15ம் கவ்வியாண்டு முதல் புதிய கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது. இது குறித்து அந்த கல்வியாண்டின் துவக்கத்தில் தொழில்நுட்பக்குழு கூடி முடிவு எடுக்கும் என்றார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...