|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

07 March, 2012

அரசின் அனுமதி இல்லாமல் இலங்கை பிரமுகர்கள் தமிழகம் வர அனுமதிக்கக்கூடாது ஜெயலலிதா!

தமிழக அரசின் அனுமதி இல்லாமல் இலங்கை பிரமுகர்கள் தமிழகம் வர அனுமதிக்கக்கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா பிரதமரை கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக பிரதமருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். இலங்கை பிரமுகர்கள் இந்தியா வர விரும்பும்போது தமிழகத்தை கலந்து ஆலோசித்த பின்னர்தான் அவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க முடியும் என ஜெயலலிதா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் இலங்கை அதிபரின் உறவினர் திருக்குமரன் நடேசன் ராமேஸ்வரம் வந்தபோது அவரைத் தாக்க முயற்சி நடந்தது. இதுபோல இலங்கை பிரமுகர்கள் தமிழகம் வந்தபோது தாக்க முயற்சிகள் நடைபெற்றுள்ளதை ஜெயலலிதா தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். மத்திய அரசிடம் இருந்தோ அல்லது இலங்கை அரசிடம் இருந்தோ தகவல் எதுவும் வரவில்லை எனில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என ஜெயலலிதா தெரிவித்துள்ளார். மேலும் எதிர்காலத்தில் இலங்கை பிரமுகர்கள் அடிக்கடி தமிழகத்துக்கு வருவதை மத்திய அரசு ஊக்குவிக்காமல் இருந்தால் பாராட்டுக்குரியதாக இருக்கும் என அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...