|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

11 May, 2012

அம்பேத்கரைப் பற்றிய கார்ட்டூன் நீக்கப்படும் கபில்சிபல்.

பாடப்புத்தகத்தில் சர்ச்சைக்குரிய பிஆர்.அம்பேத்கரின் கார்ட்டூன் வெளியானது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் வருத்தம் தெரிவித்தார்.முன்னதாக அந்த கார்ட்டூன் அம்பேத்கரை இழிவுபடுத்துவதாக உள்ளது என்று கூறி மக்களவையில் தலித் எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதுகுறித்து கருத்து தெரிவித்த கபில்சிபல், அந்த கார்ட்டூன் இனிமேல் விநியோகிக்கப்படாது. அம்பேத்கரை நாங்கள் மிகவும் மதிக்கிறோம். அவரது புகழை களங்கப்படுத்த முடியாது என்றார்.இது அரசியல் விவகாரம் அல்ல. அந்த கார்ட்டூன் புத்தகங்களில் வெளிவந்த 2006-ல் நான் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இல்லெயனினும் இந்த விவகாரத்துக்காக தனிப்பட்ட முறையில் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எந்த சமுதாயத்தையும் இழிபடுத்தும் நோக்கம் எங்களுக்கில்லை என்றார் அவர்.அந்த கார்ட்டூனை பாடப்புத்தகங்களின் இருந்து நீக்க உத்தரவிட்டுள்ளதாகவும் கபில் சிபல் தெரிவித்தார்,

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...