|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

11 May, 2012

6ம் வகுப்பு மாணவர்கள் வகுப்பறையில் ஆபாச படம் தயாரிப்பு?


மெக்சிகோவில் 6ம் வகுப்பு மாணவர்கள் 4 பேர் சேர்ந்து வகுப்பறையிலேயே ஆபாச படம் எடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மெக்சிகோவில் இந்தியர்கள் அதிகம் இருக்கும் கல்கினி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கும் 4 மாணவர்கள் வகுப்பறையில் யாரும் இல்லாதபோது ஆபாச படம் தயாரித்துள்ளனர். 3 மாணவர்கள் உடலுறவில் ஈடுபட அதை நான்காவது மாணவர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ இன்டர்நெட்டில் உலா வந்திருக்கிறது. அதை அந்த மாணவர்களில் ஒருவரின் தாய் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே இது குறித்து கல்வி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அதன் பிறகு கல்வித் துறை அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து கல்வித் துறை செய்தித்தொடர்பாளர் உமர் கூறுகையில்,6ம் வகுப்பு மாணவர்கள் ஆபாச வீடியோ தயாரித்தது உண்மை தான். அந்த வீடியோ நிஜமானது. இது கல்வித் துறையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ தயாரிப்பில் பெரியவர்கள் யாராவது ஈடுபட்டார்களா என்பது குறித்து கல்வித் துறையும், ஆசிரியர்கள் சங்கமும் விசாரணை நடத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக எந்த ஆசிரியர் மற்றும் மாணவர்கள் மீதும் இதுவரை ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அந்த மாணவர்களுக்கு மனோதத்துவ நிபுணர்களைக் கொண்டு கவுன்சிலிங் அளிக்கப்படுகிறது. இந்த வீடியோ கடந்த ஏப்ரல் மாத இறுதியில் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...